உத்தரகண்ட்டில் சாலை விபத்து இருவர் பலி-ஐந்து பேர் படுகாயம்!

உத்தரகண்ட்டில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

Last Updated : Jan 9, 2018, 06:18 PM IST
உத்தரகண்ட்டில் சாலை விபத்து இருவர் பலி-ஐந்து பேர் படுகாயம்! title=

உத்தரகண்ட்டில் உள்ள ரிஷிகேஷில் இன்று மாலை கார் ஒன்றின் மீது இரண்டு லாரிகள் மோதிக் கொண்டதில்,சம்பவ இடத்திலேயே  இருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

லாரி அதிவேகத்தில் விரைந்து வந்து கார் மீது மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News