சுற்றுச்சூழல் அனுமதி வரும்வரை 8 வழிச்சாலை பணியை தொடங்க மாட்டோம்: மத்திய அரசு!

சுற்றுச்சூழல் அனுமதி வரும்வரை 8 வழிச்சாலை பணியை தொடங்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

Last Updated : Aug 7, 2019, 12:54 PM IST
சுற்றுச்சூழல் அனுமதி வரும்வரை 8 வழிச்சாலை பணியை தொடங்க மாட்டோம்: மத்திய அரசு! title=

சுற்றுச்சூழல் அனுமதி வரும்வரை 8 வழிச்சாலை பணியை தொடங்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நில அளவீடு பணிகள் முடிவுற்ற நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. 

இந்நிலையில், 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து 8 வழி சாலை திட்ட மேலாண்மை இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.

இதை தொடர்ந்து, 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை தற்போது நீக்க முடியாது. 8 வழிச்சாலைக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்?. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மத்திய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில்உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. 

மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் எனவும் மத்திய அரசு 
தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் வரும் 22 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

Trending News