IPL 2018: பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்கு 165 ரன்கள்!

IPL 2018 தொடரின் 53-வது போட்டியில் ராஜஸ்தான் அணி 164 ரன்கள் குவித்துள்ளது!

Last Updated : May 19, 2018, 05:47 PM IST
IPL 2018: பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்கு 165 ரன்கள்! title=

IPL 2018 தொடரின் 53-வது போட்டியில் ராஜஸ்தான் அணி 164 ரன்கள் குவித்துள்ளது!

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

இத்தொடரின் 53-வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. ஜெய்பூர் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் திருப்பாதி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ரஹானே 33(31), ஹென்ரிச் 32(21) குவித்தார். 

இதனால் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது!

Trending News