லாலு! மகனின் திருமணத்திற்கு 5 நாள் பரோலில் வருகிறார்!!

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 நாள் பரோல் கிடைத்துள்ளது!

Last Updated : May 9, 2018, 03:46 PM IST
லாலு! மகனின் திருமணத்திற்கு 5 நாள் பரோலில் வருகிறார்!! title=

பீஹார் முதல்வராக, 1994 -1996-ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், ரூ.89.27 லட்சம் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.

ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார். அப்போது, 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் லாலுவின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு வரும் 12-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. தன் மகனின் திருமணத்தில் பங்கேற்க, 5 நாட்கள் பரோல் கோரி லாலு குடும்பத்தினர் அம்மாநில சிறைத்துறையிடம் விண்ணப்பித்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சிறைத்துறை நிர்வாகம், அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.

முன்னதாக, இவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News