7th Pay Commission: டிஏ உயர்வு பற்றிய முக்கிய செய்தி, இந்த நாளில் அறிவிப்பு வெளியாகுமா?

7th Pay Commission News/ Dearness allowance Hike: மத்திய ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன், அதாவது மார்ச் 16ம் தேதி, டிஏ அதிகரிப்பை பற்றி அரசு அறிவிக்கக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 9, 2022, 04:22 PM IST
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • ஹோலி பண்டிகைக்கு முன், டிஏ அதிகரிப்பை பற்றி அரசு அறிவிக்கக்கூடும்.
  • 3% அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: டிஏ உயர்வு பற்றிய முக்கிய செய்தி, இந்த நாளில் அறிவிப்பு வெளியாகுமா? title=

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஹோலி பண்டிகைக்கு முன், அதாவது மார்ச் 16ம் தேதி, டிஏ அதிகரிப்பை பற்றி அரசு அறிவிக்கக்கூடும். கடந்த ஆண்டும் தீபாவளியின் போது அரசு அகவிலைப்படியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. அதே வழியில், ஹோலி பண்டிகைக் காலத்தில், அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3% அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அகவிலைப்படியில் 3% உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில், அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு அறிவிக்கக்கூடும். அதாவது, இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34% வீதத்தில் அகவிலைப்படி கிடைக்கும். 

தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI இன்டெக்ஸ்) டிசம்பர் 2021 குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்துள்ளது. அகவிலைப்படிக்கான சராசரி 12 மாத குறியீட்டு எண் 351.33, சராசரியாக 34.04% ஆக உள்ளது. ஆனால், அகவிலைப்படி எப்போதும் முழு எண்களில் வழங்கப்படுகிறது. அதாவது, ஜனவரி 2022 முதல், மொத்த அகவிலைப்படி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பு எப்போது வரும்? 
தற்போது, ​​ஊழியர்கள் ஏற்கனவே 31% அகவிலைப்படியைப் பெறுகின்றனர். ஆனால் ஜனவரி 2022 முதல், 3% அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி கிடைக்கும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் விதிக்கப்பட்டிருந்ததால், அரசாங்கம் இது குறித்த அறிவிப்பை அளிக்காமல் இருந்தது. தற்போது நாளை முடிவுகள் வெளியாகவுள்ளதால், விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஏஐசிபிஐ-ஐடபிள்யூ டிசம்பரில் நிராகரித்தது

அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, இப்போது அடுத்த அகவிலைப்படி ஜூலை 2022 இல் கணக்கிடப்படும். டிசம்பர் 2021க்கான AICPI-IW (தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, டிசம்பரில் இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 புள்ளிகளாக இருந்தது. நவம்பரில், இந்த எண்ணிக்கை 125.7 புள்ளிகளாக இருந்தது. டிசம்பரில் 0.24% குறைந்துள்ளது. ஆனால், இது அகவிலைப்படி உயர்வை பாதிக்கவில்லை. தொழிலாளர் அமைச்சகத்தின் ஏஐசிபிஐ-ஐடபிள்யூ புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 

நவம்பரில் AICPI-IW குறியீடு அதிகரித்தது

தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, நவம்பர் 2021 இல் AICPI-IW குறியீடு 0.8% அதிகரித்து 125.7ஐ எட்டியது. இதிலிருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என்பது தெளிவாகிறது. இப்போது டிசம்பர் 2021 புள்ளிவிவரத்தில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், ஜனவரி 2022 இல், டிஏ 3 சதவிகிதம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் டிஏ தற்போது 31 சதவீதமாக உள்ளது. இப்போது 3 சதவீத உயர்வுக்குப் பிறகு 34 சதவீதத்தை எட்டும்.

ஜூலை 2021 முதல் டிஏ கணக்கீடு

ஜூலை 2021 - AICPI-353 - அகவிலைப்படி - 31.81%
ஆகஸ்ட் 2021 - AICPI-354 - அகவிலைப்படி -  32.33%
செப்டம்பர் 2021 - AICPI- 355- அகவிலைப்படி -  32.81%
நவம்பர் 2021 - AICPI - 362.016- அகவிலைப்படி -  33 %
டிசம்பர் 2021  - AICPI - 361.152 - அகவிலைப்படி - 34%

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ அரியர் குறித்த முக்கிய அப்டேட், அரியர் கிடைக்குமா கிடைக்காதா? 

அகவிலைபப்டி எண்களின் கணக்கீடு

ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான கணக்கீடு- 123X 2.88 = 354.24
செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.7X 2.88= 362.016
டிசம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.4 X 2.88 = 361.152

34% அகவிலைப்படியில் கணக்கீடு

அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்ட பிறகு, மொத்த அகவிலைபப்டி 34% ஆக இருக்கும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசும்போது, சம்பளத்தில்ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ.5580/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 540X12 = ரூ.6,480

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ 19,346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ 17,639/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 19,346-17,639 = ரூ. 1,707/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1,707 X12 = ரூ 20,484

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்கள் மார்ச் 31-க்குள் இதை செய்து முடிக்க வேண்டும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News