வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறும்படி ராணுவ வீரர்களுக்கு உயரதிகாரிகள் இட்ட உத்தரவையடுத்து ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறினர்!!
இராணுவ உறுப்பினர்கள் இராணுவத்தில் பணியாற்றாத நபர்களுடன் எந்தவொரு சமூக ஊடகக் குழுவிலும் அங்கம் வகிக்க கூடாது என இராணுவஅதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு மீறலைத் தடுக்க, அதிகாரி மட்டும் குழுக்களை அவ்வப்போது சரிபார்க்கும் என்றும் அது கூறியது.
முக்கியமான ராணுவ தகவல்கள் வாட்ஸ் ஆப் குழுக்களின் மூலம் கசிவதாகவும் எந்த நேரமும் செல்போன்கள் கண்காணிக்கப்படுவதாகவும் வீரர்களை உயர் அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் ராணுவ வட்டாரங்களில் பரபரப்பு உருவானது. மேஜர் ஜெனரல், லெப்டினனட் ஜெனரல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் அவசியமில்லாத வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறினர். 13 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ஏராளமான வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி தகவல்களையும் வீடியோக்களையும் பரிமாறி வருகின்றனர்.
இதில் முக்கியமான ராணுவ ரகசியங்களும் தெரிந்தோ தெரியாமலோ பரிமாறப்படுவது தீவிரவாதிகளுக்கும் எதிரிகளுக்கும் சாதகமாகி விடுகிறது. சமூக வலைதளங்களில் ராணுவ வீரர்களை குறிவைக்கும் அழகான பெண்களால் புதிய ஆபத்துகள் உருவாகின்றன. படைகளின் நகர்வு, முகாம்கள், ஆயுதபலம் போன்ற முக்கியத் தகவல்கள் எதிரி நாடுகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அதிகாரியின் கூற்றுப்படி, ஓய்வுபெற்ற அதிகாரிகள் அதிகம் பேசும் படைப்பிரிவுக்குள் அதிருப்தியைத் தூண்டுவதாக இராணுவம் நம்புகிறது.