இரவு தூக்கத்தை மட்டும் ப்ளீஸ் தவிர்த்திடாதீங்க, அப்புறம் இந்த பெரிய சிக்கல் வரும்

Night Sleep, Health Risk ; இரவு நேர தூக்கத்தை தவிர்த்தால் மூளை பக்கவாதம் மூலம் சர்க்கரை நோய் வரும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 4, 2024, 08:57 AM IST
  • இரவு நேர தூக்கத்தை தவிர்க்க வேண்டாம்
  • ஆரோக்கியத்துக்கு இரவு நேர தூக்கம் அவசியம்
  • நீரிழிவு, இதயநோய் ஆபத்துகள் வரும்
இரவு தூக்கத்தை மட்டும் ப்ளீஸ் தவிர்த்திடாதீங்க, அப்புறம் இந்த பெரிய சிக்கல் வரும் title=

யாரெல்லாம் இரவு தூக்கத்தை தவிர்க்காமல் இருகிறார்களோ, அதுவும் இரவு உணவை சீக்கிரம் எடுத்துக் கொண்டு முன்கூட்டியே படுகைக்கு செல்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருப்பார்கள். 8 முதல் 10 மணி நேரம் வரை இரவு நேர தூக்கத்தை எடுப்பது அவசியம். ஆனால், சில காரணங்களால் பலரால் இரவில் சரியாக தூங்க முடிவதில்லை. இது பெரிய பிரச்சனைகளில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதையும் சிலர் அறிவதில்லை. தூக்கம் உடலுக்கு அநாவசியம் என்ற எண்ணமே இதற்கு காரணம். அவர்கள் எல்லாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தூக்கம் உடலுக்கு அவசியம், அத்தியாவசியம். 

இரவு நேர தூக்கமின்மை

இப்போது ஒரு புதிய ஆய்வில், இரவில் போதுமான மற்றும் நல்ல தூக்கம் இல்லாதது, மூளை பக்கவாதம், இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற பல தீவிர நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது. உடல் செயல்பாடு மட்டுமின்றி, 24 மணி நேரத்திலும் சரியான தூக்கம் மற்றும் விழிப்பு நிலையும் நமது ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு தெளிவுப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பேன்-ஈறு தொல்லையை போக்க ஒரே வழி! இதை செய்து பாருங்கள்..

தூக்கமின்மை ஆபத்துகள்

ஒவ்வொரு இரவும் 8 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம். தூக்கமின்மை இன்சுலின் உணர்திறனை பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால், உடலில் இன்சுலின் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை, இது டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. 

என்னென்ன நோய்கள் வரும்?

அதுமட்டுமின்றி, தூக்கமின்மை பசியை அதிகரிக்கும் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது, இது அதிகமாக சாப்பிடும் போக்கை அதிகரிக்கும். தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு மூளை பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை உடலில் வீக்கம் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். எனவே ஆரோக்கியமான தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மருத்துவமனைக்கு செல்லும் வழக்கம் இருக்காது.

மேலும் படிக்க | பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை, 6 லட்சம் பெறுவது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News