அரசு ஊழியர்கள் அதிர்ச்சி... இந்த முறையும் ஏமாற்றம் தான்!

General Provident Fund: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்திய பிறகு, ஊழியர்கள் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 12, 2023, 10:57 AM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி (GPF) அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
  • GPF மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் நிதி அமைச்சகத்தால் திருத்தப்படுகிறது.
அரசு ஊழியர்கள் அதிர்ச்சி... இந்த முறையும் ஏமாற்றம் தான்! title=

General Provident Fund: நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரோ மத்திய அரசு ஊழியராக இருந்தால், இந்தச் செய்தி உங்களை வருத்தமடையச் செய்யலாம். ஆம், 65 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு பேரிடியை தந்துள்ளது. 

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்திய பிறகு, ஊழியர்கள் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து 14ஆவது காலாண்டாக ஜிபிஎஃப் மீதான வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் அரசு செய்யவில்லை. வட்டி விகிதம் உயர்த்தப்படாததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | PPF திட்டத்தில் அரசு செய்த பெரிய மாற்றம்: புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

ஏப்ரல் 1 முதல் வட்டி விகிதம் மாற்றப்பட்டது

பொது வருங்கால வைப்பு நிதி (GPF) 2023ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான CPF வட்டி விகிதத்தை எந்த மாற்றமும் இல்லாமல் அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. ஏப்ரல் 1 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தால் மாற்றப்பட்டது. இப்போது பொது வருங்கால வைப்பு நிதியின் (GPF) வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்த்த முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்ந்து 14வது காலாண்டாக வட்டி விகிதம் மாறவில்லை

கடந்த 13 காலாண்டுகளில் இருந்து GPF இன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 14ஆவது முறையாக வட்டி விகிதம் முன்பு போலவே உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் (ஏப்ரல் 1, 2023 முதல் ஜூன் 30, 2023 வரை) பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த நிதிகளில் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக பராமரிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

GPF யாருக்கு கிடைக்கும்?

பொது வருங்கால வைப்பு நிதி (GPF) அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன்கீழ், அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பொது வருங்கால வைப்பு நிதியில் (GPF) முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பணியின் போது திரட்டப்பட்ட மொத்தத் தொகையானது ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு வழங்கப்படும். GPF மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் நிதி அமைச்சகத்தால் திருத்தப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜாக்கிரதை! உங்கள் PF கணக்கிலிருந்து இந்த வழிகளில் பணம் திருடு போகலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News