Rs.500 Rare Note: இந்த 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் ஆயிரக்கணக்கில் அள்ளலாம்!!

ஒரு பழைய 500 ரூபாய் நோட்டு உங்களை பணக்காரராக்கும். இதைக் கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இது உண்மைதான். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 7, 2021, 08:56 PM IST
  • பழைய பயனற்ற ரூபாய் நோட்டு உங்களை பணக்காரராக்கும்.
  • 500 ரூபாய்க்கு பதிலாக, 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
  • கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே எளிய வழியில் பணம் சம்பாதிக்கலாம்.
Rs.500 Rare Note: இந்த 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் ஆயிரக்கணக்கில் அள்ளலாம்!! title=

Earn money with old Rs.500 note: பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும். இவை நமது முன்னோர்கள் பல காலங்கள் முன்னர் சொன்ன பொன்மொழிகள் என்றாலும், இவை இப்போதும், இந்த காலத்துக்கும் இது பொருந்தும். இப்போதும் பணம் ஈட்ட எந்த வழி கிடைத்தாலும் அதை மக்கள் தக்கவைத்துக்கொண்டு பணம் ஈட்டுவதில் முழுமையாக ஈடுபட்டு விடுகிறார்கள். 

இப்போதும் எந்த சிரமமும் இல்லாமல், மிக எளிதாக, விரைவில் ஆயிரக்கணக்கில் பணம் ஈட்ட ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. நீங்களும் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேகத்தில் பணம் ஈட்ட வேண்டுமா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான். 

ஆனால், இதற்கு உங்களிடம் பழைய மற்றும் பயனற்ற 500 ரூபாய் நோட்டு (Rs.500 note) இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அந்த ரூபாய் நோட்டுதான் ஆயிரக்கணக்கில் நீங்கள் சம்பாதிப்பதற்கான துருப்புச்சீட்டு!!

பழைய 500 ரூபாய் நோட்டு உங்களை பணக்காரராக்கும்

ஒரு பழைய 500 ரூபாய் நோட்டு உங்களை பணக்காரராக்கும் (Rich). இதைக் கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இது உண்மைதான். பழைய 500 ரூபாய் நோட்டை வைத்திருக்கும் ஒருவர் எப்படி பணக்காரர் ஆக முடியும் என நீங்கள் நினைக்கலாம். அதுவும் அந்த ரூபாய் நோட்டு இப்போது புழக்கத்தில் கூட இல்லாத வேளையில் இது எப்படி சாத்தியமாகும் என்றும் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இது சாத்தியமே!! உங்களுடைய அந்த பழைய, பயனற்ற ரூபாய் நோட்டு இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே உங்களை பணக்காரராக்கும். 

அச்சிடும் போது ஏற்பட்ட தவறால் இது விலைமதிப்பற்றதானது 

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூபாய் நோட்டுகளை அச்சிடும்போது, ​​இவற்றிற்கென ஒரு முறையான வகை நடைமுறையில் இருக்கும். அந்த முறையில்தான் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. இதனால் அனைத்து ரூபாய் நோட்டுகளும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருக்கின்றன. 

ALSO READ: அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் இந்த “5” ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா..!!!

ஆனால் ரிசர்வ் வங்கியில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும்போது ஏதேனும் தவறு ஏற்பட்டு அவை அப்படியே சந்தையில் வந்துவிட்டால், அந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு கூடி விடுகின்றது. அவை சிறப்பம்சம் வாய்ந்தவையாகி விடுகின்றன. இந்த நோட்டுகளை மக்கள் பல மடங்கு விலையில் வாங்க தயாராகிறார்கள்.

500 ரூபாய்க்கு பதிலாக, 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்

உங்களிடம் பழைய ஐநூறு ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதன் வரிசை எண் (serial number) இரண்டு முறை அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக சரிபார்க்கவும். அப்படி இருந்தால், இந்த நோட்டுக்கு பதிலாக 5000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இது தவிர, உங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டின் ஒரு விளிம்பு பெரியதாக இருந்தால், அதாவது கூடுதல் காகிதம் அதில் விடப்பட்டிருந்தால், அந்த நோட்டுக்கு ஈடாக 10000 ரூபாயை நீங்கள் பெறலாம்.

இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டும்

ரூபாய் நோட்டுகளை விற்க, நீங்கள் வீட்டில் இருந்தபடியே oldindiancoins.com என்ற ஆன்லைன் வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். ரூபாய் நோட்டின் புகைப்படத்தை எடுத்து விற்பனையாளராக (seller) பதிவு செய்து 'on sale' என்ற டேகை  வைத்து ரூபாய் நோட்டை விற்பனையில் வைக்க வேண்டும். இதன் பிறகு, இந்த ரூபாய் நோட்டுகளை வாங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கத்  தொடங்குவார்கள். யார் மிக அதிக ஏலத் தொகையை கூறுகிறார்களோ, அவருக்கு இந்த நோட்டை நீங்கள் விற்பனை செய்து எளிதாக லாபம் காணலாம்.

ALSO READ: 2020-21 ஆம் ஆண்டில் போலி ரூ .500 நோட்டுகள் 31% அதிகரித்துள்ளன: கவனமாக இருங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News