ப்ரீதலைசர் சோதனை மூலம் COVID-19 தொற்றை நொடியில் கண்டறிய முடியும்!!

ஆல்கஹால் போதைக்கான ப்ரீதலைசர் பரிசோதனையைப் போலவே, வெளியேற்றப்பட்ட சுவாசத்தில் COVID-19-யை கண்டறியக்கூடிய ஒரு சாதனத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

Last Updated : Aug 22, 2020, 12:30 PM IST
ப்ரீதலைசர் சோதனை மூலம் COVID-19 தொற்றை நொடியில் கண்டறிய முடியும்!! title=

ஆல்கஹால் போதைக்கான ப்ரீதலைசர் பரிசோதனையைப் போலவே, வெளியேற்றப்பட்ட சுவாசத்தில் COVID-19-யை கண்டறியக்கூடிய ஒரு சாதனத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி அழிவை ஏற்படுத்தியிருந்தாலும், அலுவலகங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள் சில கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் தொடங்கியுள்ளன. COVID-19 பல  குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஆங்காங்கே பல தளர்வுகள்  அளிக்கப்பட்டுள்ளன.  அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட திறன்களுடன் தொடங்கப்பட்டுள்ளன. வளாகத்திற்குள் நுழையும் நபர்கள் IR தெர்மோமீட்டர் (IR thermometer) மூலம் சோதிக்கப்படுகிறார்கள்.  ஆனால் இந்த விஷயம் பயனற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக அறிகுறியற்ற நிகழ்வுகளில் இது முற்றிலும் பயனில்லாமல் போகிறது.

COVID-யை கண்டறிய விரைவான, திறமையான வழி இருந்தால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் அபாயத்தைக் குறைக்கலாம் என்று நம்மில் பலர் நினைக்கிறோம்.  இதற்கு விடையளிக்கும் விதமாக ஒருவரின் உடலில் ஆல்கஹால் உட்கொள்வதை ஒரு ப்ரீதலைசர் இயந்திரம் கண்டறிவது போல COVID-யை கண்டறியும் ஒரு முன்மாதிரி சாதனத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த சாதனத்தை சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அல்ட்ராஸ்மால் நானோ துகள்களால் ஆன சிறப்புப் பொருட்களின் அடிப்படையில் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் COVID-யை சுவாசத்தில் கண்டறிய முடியும். இது ஒரு மூச்சுத்திணறல் சோதனை போல.

ALSO READ | TV ரிமோட் வீட்டு கழிப்பறையை விட 20 சதவீதம் ஆபத்தானது: ஆய்வு!!

இந்த சாதனமானது நானோ துகள்களின் வரிசையால் ஆனது. அவை மூலக்கூறுகளுடன் இணைக்கப்படுகின்றன.  இவை மிகவும் உணர்திறன் வாய்ந்தவை ஆகும். இது வைரஸ்கள் மற்றும் பாதிக்கப்பட்ட உயிரணுக்களால் உமிழப்படும் ஒன்று. இயந்திர கற்றல் உதவியுடன் COVID-யை கண்டுபிடிப்பதற்கு சாதனத்தில் உள்ள சென்சாருக்கு அவர்கள் பயிற்சி அளிக்க முடிந்தது. ML-யை பயன்படுத்தி 49 ஆரோக்கியமான நபர்கள், 33 கோவிட் அல்லாத நுரையீரல் தொற்று நோயாளிகள் மற்றும் 49 COVID-19 பாசிடிவ்  நோயாளிகளின் சுவாசத்திலிருந்து பெறப்பட்ட மின்சார எதிர்ப்பு சிக்னல்  வடிவங்களை ஒப்பிட்டு பார்த்தனர். 

இரண்டு சென்டிமீட்டர் தூரத்திலிருந்து சில நொடிகளுக்கு நோயாளிகளை சாதனத்தில் சுவாசிக்கும்படி அவர்கள் கேட்டார்கள். சாதனம் ஒருவரை COVID-19 பாசிடிவ்  என்று அழைக்கும் போதெல்லாம், சாதனத்தின் துல்லியத்தை சோதிக்க ஆராய்ச்சியாளர்கள் அந்த தகவலை குறிப்பிட்டுள்ளனர். ஆரோக்கியமான நபர்களிடமிருந்து COVID-19 நோயாளிகளைக் கண்டுபிடிப்பதில் இந்த சாதனம் 76 சதவீதம் துல்லியமானது என்றும், COVID-19 உள்ளவர்களுக்கும் பிற வகையான நுரையீரல் தொற்று உள்ளவர்களுக்கும் இடையில் வேறுபடுவதில் 95 சதவீதம் துல்லியமானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

நோய்வாய்ப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட COVID-19 நோயாளிகளை வேறுபடுத்துவதற்கு இந்த சாதனம் 88 சதவீத துல்லிய விகிதத்தையும் கொண்டுள்ளது. ப்ரீதலைசரின் செயல்திறனை உண்மையிலேயே சோதிக்க கூடுதல் சோதனை தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Trending News