நடிகர் தாடி பாலாஜி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

Last Updated : Jul 4, 2017, 04:43 PM IST
நடிகர் தாடி பாலாஜி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு title=

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மனைவி நித்யா அளித்த புகாரின் பேரில் பாலாஜி மீது சென்னை மாதவரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. 

கொளத்தூரில் வசிக்கும் இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் நித்யா போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும் நடிகர் பாலாஜிக்கும் 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு வந்து என்னை சித்ரவதை செய்வார்.

அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதை மறைத்து என்னை திருமணம் செய்தார். நான் தினமும் ஜிம்முக்கு போவேன். இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டார்.

தினமும் நான் வேலைக்கு ஜிம்முக்கு செல்லும் போதும் என்னை ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணிப்பார். நான் பணிபுரியும் அலுவலகத்துக்கு குடிபோதையில் வந்து என்னைப் அவமானப்படுத்தினார். 

சமீபத்தில் என்னை அவர் தாக்கினார். இதனால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 

இவ்வாறு கூறி இருந்தார். 

இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Trending News