கார்த்திகை தீபம்: கார்த்திக்கிடம் இருந்து தப்பிய தீபா.. அடுத்து நடக்கப் போவது என்ன?

Karthigai Deepam TV Serial Online: கார்த்திக்கிடம் இருந்து தப்பிய தீபா.. அடுத்து நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 27, 2023, 12:54 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: கார்த்திக்கிடம் இருந்து தப்பிய தீபா.. அடுத்து நடக்கப் போவது என்ன? title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திக்கிடம் இருந்து தப்பிய தீபா.. அடுத்து நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவியாக திரைக்குள் இருந்து பாடும் தீபா திரையை விலக்க வேண்டாம் என கார்த்தியை தடுத்து விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | பருத்திவீரன் பஞ்சாயத்து: கொளுத்திப்போட்ட ஞானவேல் ராஜா, கொந்தளித்த நடிகர்

அதாவது இளையராஜா பல்லவி பாடியதை பார்த்தியா என்று கேட்க கார்த்திக் நடந்து விஷயங்களை அனைத்தையும் சொல்ல இதுக்கா இவ்வளவு செலவு பண்ண என்று கேள்வி கேட்கிறான். மேலும் பல்லவிக்காக போடப்பட்டிருந்த திரை செட்டப்பையும் காட்டுகிறான். 

அதன் பிறகு தீபா கார்த்திக்கு தெரியாமல் மீனாட்சி அழைத்துக் கொண்டு கிளம்ப இங்கிருந்து தப்பித்த ரூபஸ்ரீ, கோகிலா ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பிரச்சனை வந்தா தான் நான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியுறனா என்ன கோபப்படுகிறார். சரி ஏதாவது செய்யலாம் எனவும் வாக்கு கொடுக்கிறாள். 

அதன் பிறகு தீபா கார்த்திக்கிடம் பல்லவியை பாத்தீங்களா என்று கேட்க அவள் இல்ல அவளுடைய பர்சனல் வாழ்க்கையில தலையிடுற மாதிரி இருந்தா அதை செய்யக்கூடாது. அப்படி செய்கிறது தப்பு என சொல்கிறான். ஒரே ஒரு திரை தானே விளக்கி இருக்கலாமே என்று கேட்க இல்லை அப்படி செஞ்சிருந்தா அது தப்பாகி இருக்கும் எனவும் கூறுகிறான். 

அதன் பிறகு தீபா கார்த்திக்கு பால் கொண்டு வந்து கொடுக்க பல்லவி கையில் இருந்த மருதாணியை பார்த்த கார்த்திக் தீபா கையில் இருக்கும் மருதாணியை பார்த்து விடுவானோ என்ற டென்ஷன் எகிறுகிறது.

அதோடு நைட் எல்லாம் காப்பி தூங்காமல் இருக்க அதை பார்த்து தீபா சோகம் அடைகிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வறுமையில் வாடும் பிரபல நடிகர்..வீடு கூட இல்லாமல் பிளாட்பார்மில் வாழும் அவலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News