நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்: அஞ்சலியால் ஆரம்பமாகும் சுடர் - எழில் காதல்?

Ninaithen Vandhai Todays Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2024, 04:07 PM IST
நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்: அஞ்சலியால் ஆரம்பமாகும் சுடர் - எழில் காதல்? title=

Ninaithen Vandhai Serial: நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடரின் அப்பா ஹாஸ்டல் வார்டனை பார்க்க கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது இந்துவின் அப்பா ஹாஸ்பிடலுக்கு வருவதற்குள் மனோகரியின் அடியாள் வார்டனை வேறொரு பெட்டுக்கு மாற்றிவிட சுடரின் அப்பா ஏமாற்றம் அடைகிறார். 

இதையடுத்து சுடர் வீட்டில் துணி மடித்துக் கொண்டிருக்கும் போது அவளுக்கு ஹாஸ்பிடலில் எழில் இடுப்பில் கை வைத்த விஷயம் நினைவுக்கு வந்து வந்து போக குழப்பம் அடைகிறாள். 

இந்த நேரத்தில் அஞ்சலி ரூமுக்குள் வந்து இடுப்பில் கை வைக்க எனக்கு இடுப்புல காயம் ஏற்பட்டு இருக்கு அதனால கை வைக்காத என்று சொல்கிறாள். இதைத்தொடர்ந்து அஞ்சலி அப்படின்னா என் அப்பாகிட்ட வா அவரே உனக்கு ஆயின்மென்ட் போட்டு விடுவாரு என்று சொல்லி அழைத்துச் செல்கிறாள். 

மேலும் படிக்க - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தீபா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. உச்சகட்ட பதற்றத்தில் ரம்யா

எழில் வா சுடர் மருந்து போட்டு விடுறேன் என்று கூப்பிட சுடர் வேண்டாம் வேண்டாம் என்று பின்னாடியே நகர்ந்து வந்து கீழே விழ போக எழில் அவளை தாங்கிப் பிடிக்க இருவரும் ரொமான்ஸ் மோடிற்கு செல்கின்றனர். அதன் பிறகு சுடர் எனக்கு வலியெல்லாம் இல்லை என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.

அதன் பிறகு சுடருக்கு எழில் கையில் மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு மாப்பிள்ளை கோலத்தில் இருப்பது போலவே மீண்டும் மீண்டும் தோன்ற சுடர் ஏன் இப்படி எல்லாம் தோணுது என மேலும் குழப்பம் அடைகிறாள். 

பிறகு இந்து மற்றும் தீபாவிடம் இந்த விஷயத்தை சொல்ல கனவு வந்தால் நல்லது தானே என்று சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட்: கடுப்பான மதுமிதா.. கையை அறுத்துக் கொண்ட மாயா..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News