ரம்யாவை அறைந்த கார்த்திக்.. பரபரப்பில் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

Karthigai Deepam Today (2.8.2024) Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 2, 2024, 12:50 PM IST
ரம்யாவை அறைந்த கார்த்திக்.. பரபரப்பில் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் title=

Tamil Serial Karthigai Deepam Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா அபிராமியுடன் கோவிலுக்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அபிராமி கோவிலுக்கு வருபவர்களின் காலை கழுவி பரிகாரம் செய்து கொண்டிருக்க தீபாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்து ஓடி வந்து அபிராமியிடம் எதுக்கு அத்தை இப்படியெல்லாம் செய்யறீங்க என்று வருத்தப்படுகிறாள். எனக்கு கல்யாணம் ஆகும் போது என் அம்மா இப்படி பண்ணாங்க, இப்போ என் அம்மாவை போலவே நீங்களும் எனக்காக இப்படி பண்றீங்க என்று வருத்தப்படுகிறாள்.

இதை தொடர்ந்து ரம்யாவின் அப்பா கார்த்திக்கை வர வைத்து ரம்யா அவன் மீது காதலுடன் இருக்கும் விஷயத்தையும் டைரியில் இது குறித்து எழுதி வைத்திருந்த விஷயத்தையும் சொல்கிறான். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரம்யா வீட்டிற்கு வந்து அவளை அறைகிறான்.

ரம்யா ஆமா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதுக்கு தான் இப்படி பண்ணேன், இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்க ரம்யாவின் அப்பாவும் போலீசும் உள்ளே வருகின்றனர், போலீஸ் ரம்யாவை கைது செய்ய போவதாக சொல்ல ரம்யா போலிஸ் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொள்கிறாள்.

இதனால் ரம்யாவின் அப்பா அதிர்ச்சி அடைய இறுதியில் இது அவருடைய கனவு என தெரிய வருகிறது. இதனால் கார்த்திக்கிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் கார்த்திக் அவர் சொன்னதால் வீட்டிற்கு வந்து விட உங்களுக்கு மாற்றி போன் செய்து விட்டதாக சமாளித்து விடுகிறார்.

அதன் பிறகு கார்த்திக், தீபா கோவிலுக்கு வர கார்த்திக் காரை பார்க் செய்து விட்டு வர போன கேப்பில் தலையில் இருந்த பூவை எடுத்து விட்டு கார்த்திக் வந்ததும் பூ வாங்கி வைத்து விட சொல்கிறாள். கார்த்திக் உங்க தலையில் ஏற்கனேவே பூ இருந்ததே என்று கேட்க தீபா இல்லை என்று சொல்கிறாள்.

பூ கடைக்காரர் அந்த பொண்ணு உங்க கையால் பூ வச்சுக்கணும்னு ஆசைப்படுத்து வாங்கு வச்சி விடுங்க என்று சொல்ல கார்த்திக் தீபாவுக்கு பூ வைத்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - இதயம் சீரியல் அப்டேட்: உன் குடுமி எங்க கையில்... அடங்கிய ஆதி! காத்திருந்த அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News