இந்திய வம்சாவளி சிறுமி கொலை வழக்கு! 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல்!

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியின் மரணத்திற்கு காரணமான 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2023, 06:53 PM IST
  • மியா படேலைக் கொன்றது தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் டி மோஸ்லி ஸ்மித்துக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.
  • ஸ்மித் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளி சிறுமி கொலை வழக்கு! 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல்! title=

வாஷிங்டன்: 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியின் மரணத்திற்கு காரணமான 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுமி மியா படேலைக் கொன்றதாக ஜனவரி மாதம் ஷ்ரெவ்போர்ட்டைச் சேர்ந்த ஜோசப் லீ ஸ்மித் என்பவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக KSLA நியூஸ் 12 மற்றும் ஷ்ரேவ்போர்ட் டைம்ஸ் போன்ற உள்ளூர் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மாங்க்ஹவுஸ் டிரைவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் படேல் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவளது அறைக்குள் புகுந்த துப்பாக்கி குண்டு அவளது தலையில் தாக்கியது. படேல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் மூன்று நாட்கள் உயிருக்கு போராடினார். மார்ச் 23, 2021 அன்று இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

ஜோசப் லீ ஸ்மித்திடம் விசாரணை செய்த போது, சூப்பர் 8 மோட்டல் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் ஸ்மித் மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. விமல் மற்றும் சினேகல் படேல் ஆகியோருக்கு சொந்தமான ஹோட்டலில் மியா மற்றும் ஒரு இளைய சகோதரருடன் தரை தளத்தில் வசித்து வந்தனர். வாக்குவாதத்தின் போது, ஸ்மித் மற்றவரை 9-மிமீ கைத்துப்பாக்கியால் சுட்டார்.  அந்த புல்லட்  எதிரில் இருந்த மனிதனைத்  தாக்க தவறவிட்டது, ஆனால் ஹோட்டல் அறைக்குள் சென்று படேலின் தலையில் தாக்கியது. 

மேலும் படிக்க | தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!

மார்ச் 2021 இல் மியா படேலைக் கொன்றது தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் டி மோஸ்லி ஸ்மித்துக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  படேலின் கொலையுடன் தொடர்புடைய தண்டனைகள் தவிர ஸ்மித் நீதியைத் தடுத்ததற்காக 20 ஆண்டுகள் மற்றும் மோசமான செய்கைக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகள்  பரோல் அல்லது தண்டனைக் குறைப்பு ஆகியவற்றின் பலன் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. வியாழனன்று, கேடோ பாரிஷ் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் கூறுகையில், "ஸ்மித் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் மொத்தம் 100 ஆண்டுகள் தொடர்ந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க | இலங்கை: ஷாக்கில் மக்கள்!! இன்று முதல் மின்சார கட்டணம் 66% அதிகரிப்பு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News