ரியல் எஸ்டேட் துறையில் அதிக ஆர்வம் காட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

NRI Investment: ரூபாய் வீழ்ச்சி இந்திய சந்தைக்கு ஒரு மோசமான சூழ்நிலைதான். ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அப்படி அல்ல. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2023, 02:40 PM IST
  • உயர் ரக வீடுகளின் தேவை, இந்திய ரியல் எஸ்டேட் மீட்சியின் பாதையில் உள்ளது என்பதற்கான நல்ல அறிகுறியாகும்.
  • வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பங்கு வகிப்பதும், சொந்த நாட்டுடனான தொடர்பை மீண்டும் ஏற்படுத்துவதும் புத்திசாலித்தனம்.
  • இந்தியாவில் முதலீடு செய்து, வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது புத்திசாலித்தனமான முதலீடாக பார்க்கப்படுகின்றது.
ரியல் எஸ்டேட் துறையில் அதிக ஆர்வம் காட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் title=

சமீப காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகளின் அளவுகள் அதிகமாகி வருகின்றன. இதில் சொத்துகள் மூலம் செய்யும் முதலீட்டின் அளவு அதிகமாக உள்ளது.  என்ஆர்ஐ முதலீட்டாளர்கள் இந்தியாவில் வீடு வாங்கும் முன் சில விவரங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பல என்ஆர்ஐ-கள் இந்தியாவை தங்கள் இரண்டாவது தளமாக மாற்ற விரும்புகின்றனர். இதற்கு பல வலுவான காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். 

என்ஆர்ஐ முதலீடுகளுக்கு முக்கியமாக கருதப்படும் சில காரணங்கள்:

1. வீழ்ச்சியடையும் ரூபாய் மதிப்பு:

ரூபாய் வீழ்ச்சி இந்திய சந்தைக்கு ஒரு மோசமான சூழ்நிலைதான். ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அப்படி அல்ல. என்ஆர்ஐ கண்ணோட்டத்தில், ரூபாய் வீழ்ச்சி ஒரு வரம் போலவே பார்க்கப்படுகின்றது. முதலீட்டு கண்ணோட்டத்தில், நிலம், வீட்டு விலைகள் எப்போதும் ஏற்றத்தில்தான் இருக்கும். இது அவற்றின் முதலீட்டு மதிப்பை அதிகரிக்கும். புதிதாக வீடு வாங்க்குபவர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு  மிக முக்கியமான காரணியாக உள்ளது. 

2. உயரும் சொத்து விலை.

இந்தியாவின் நிலை மற்ற நாடுகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. இந்தியாவில், 2020 முதல் சொத்து விலைகள் அதிகரித்து வருகின்றன. விலையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது, ஆனால் 2023 இல் அது உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கோணத்தில், இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்குவது அர்த்தமுள்ளதாக கருதப்படுகின்றது. வரும் மாதங்களில் சொத்து விலை 6% உயரும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆகையால் இந்தியாவில் சொத்து வைத்திருப்பது ஒரு இலாபகரமான டீலாக கருதப்படுகிறது. 

மேலும் படிக்க | ரஷ்ய பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த புழவஞ்சி கிராம வாலிபர்!

3. சொத்து மதிப்பு

சொத்து மதிப்பிற்கான பல காரணங்களில் நில இருப்பு மற்றும் கட்டப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு (ஹவுசிங் பிராஜெக்ட்) முக்கிய பங்கு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சொத்து விலை உயர்கிறது. அதன் தொடர்ச்சியாக வாடகையும் உயர்கிறது. இந்தியாவில் வீடு இருந்தால், ஒவ்வொரு ஆண்டும் அதிக வீட்டு வாடகை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்ற கருத்தும் உள்ளது.

NRI முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வருமான ஆதாரமாக இருக்கும். அதே நேரத்தில், அவர்களின் சொத்து மதிப்பும் தொடர்ந்து ஏற்றத்தைக் காணும். 

4. பாதுகாப்பான உணர்வு

பெரும்பாலான என்.ஆர்.ஐ.க்கள் சொந்தமாக வீடு வைத்திருப்பதை பாதுகாப்பான முதலீடாக கருதுகிறார்கள். இது தொடர்ந்து அதிகரிக்கும் முதலீட்டு கருவியாக பார்க்கப்படுகிறது. மேலும், இதை விட பாதுகாப்பான முதலீடுகள் மிகக்குறைவே என நிபுணர்களும் கருதுகிறார்கள். 

5. உகந்த வாழ்க்கை முறைக்கான தேர்வு

பெரிய மற்றும் நல்ல இடங்களில் முதலீடு செய்வது எளிது. இவற்றில் சில, என்ஆர்ஐ-களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதால், பெரிய வீடுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. மேலும், பல ஹவுசிங் சொசைடிகளில் கிளப் ஹவுஸ் மற்றும் தியேட்டர் போன்ற வசதிகள் வெளியே போகாமலேயே கிடைக்கின்றன. 

இந்தியாவில் வீடு வாங்குவதற்கு முன் பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, என்ஆர்ஐ முதலீட்டாளர்கள், சொத்தை வாங்குவதற்கான காரணத்தை முதலில் நன்கு ஆராய வேண்டும். அந்த சொத்தின் மூலம் தங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதில் போதுமான தெளிவு தேவை. இந்தியாவில் வீடு வாங்குவதற்கான சில முக்கிய காரணங்கள்:

- குடும்பத்துடன் / சொந்த நாட்டுடன் நெருக்கமாக இருக்கும் உணர்வு.

- முதலீட்டு கண்ணோட்டம். 

இன்று என்ஆர்ஐ-கள் வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை இடங்களிலும் அதிக முதலீடு செய்கின்றனர். உயர் ரக வீடுகளின் தேவை, இந்திய ரியல் எஸ்டேட் மீட்சியின் பாதையில் உள்ளது என்பதற்கான நல்ல அறிகுறியாகும். வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பங்கு வகிப்பதும், சொந்த நாட்டுடனான தொடர்பை மீண்டும் ஏற்படுத்துவதும் புத்திசாலித்தனம். இந்தியாவில் முதலீடு செய்து, வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது புத்திசாலித்தனமான முதலீடாக பார்க்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | துபாய் வாசிகளுக்கு ஒரு நல்ல செய்தி: இனி 24 மணி நேரத்தில் இது கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News