மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரியில் டிஏ 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. 

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) அறிவிப்பு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கூறப்படுகின்றது. எனினும், ஜூலை முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

1 /9

இன்னும் சில நாட்களில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பான 2 செய்திகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்தில், மத்திய அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் சம்பளம் உயரும். இது தவிர, 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 

2 /9

மத்திய ஊழியர்களுக்கான தேசிய கவுன்சிலின் (பணியாளர் தரப்பு) கூட்டு ஆலோசனை அமைப்பின் செயலாளரான சிவ கோபால் மிஸ்ரா, கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

3 /9

ஜனவரி 2024 இல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திலும் அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

4 /9

அகவிலைப்படி 4% அதிகரித்தால் ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரமாக இருந்தால், அவரது அகவிலைப்படியாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஜூலை மாதத்தில் டிஏ மற்றும் சம்பள உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் பல படிகள் அதிகரிக்கும், இது பணவீக்கத்தில் இருந்து அவர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும்.

5 /9

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) அறிவிப்பு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கூறப்படுகின்றது. எனினும், ஜூலை முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படும். சுமார் 1.25 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரிய நிவாரணமாக அமையும்.

6 /9

மற்றொரு நல்ல செய்தியாக, நிலுவையில் உள்ள 18 மாத டிஏ நிலுவைத் தொகையையும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கணக்குகளில் அரசாங்கம் டெபாசிட் செய்யலாம் என கூறப்படுகின்றது. எனினும் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை. இந்த தொகை வந்தால், முதல் வகுப்பு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான டிஏ நிலுவைத் தொகை வரும்.

7 /9

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரியில் டிஏ 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வந்தது. இப்போது ஜூலை 2024 -இலும் 4% டிஏ உயர்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

8 /9

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் திருத்தப்படுகின்றது. ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்றன. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.