திருச்சியில் கெத்துக்காட்டிய அஜித்தின் மாஸ் புகைப்படங்கள்

திருச்சியில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட அஜித் ரசிகர்களை பார்த்து கையசைத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது 

1 /4

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 

2 /4

இதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். அவரை பார்க்க அப்பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்  

3 /4

கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரசிகர்கள் குவிந்ததை அறிந்த அஜித்குமார், அவர்களை பார்க்க முடிவெடுத்தார்.  உடனடியாக  ரைபிள் கிளப் கட்டடத்தின் மேல்மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

4 /4

அஜித்தை பார்த்ததும், ரசிகர்கள் ஆரவாரக் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்திப்பதால் அஜித்தும் மகிழ்ச்சியடைந்தார்.