எச்சரிக்கை! பூண்டு சர்வரோக நிவாரணி தான்... ஆனால்..!

பூண்டு அதிக கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் தவறுதலாக கூட பூண்டை அளவிற்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்.

1 /5

பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது கல்லீரலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும், எனவே நீங்கள் ஏதேனும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

2 /5

பலருக்கு வியர்வை மற்றும் வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பூண்டை உட்கொள்வது அவர்களின் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். உங்களுக்கும் துர்நாற்றம் மற்றும் வியர்வை இருந்தால், பூண்டைப் பயன்படுத்த வேண்டாம். 

3 /5

அசிடிட்டி பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அசிடிட்டி பிரச்னை இருந்தால், பூண்டு சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படும். 

4 /5

பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வது சில நேரங்களில் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். பூண்டில் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயை உண்டாக்கும் சில கலவைகள் உள்ளன. வாந்தி, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் இருந்தால் கூட பூண்டு சாப்பிட வேண்டாம். 

5 /5

செரிமானம் சரியாக இல்லை என்றால் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் அல்லது காரமான எதையும் சாப்பிட்டால் அவர்களின் வயிறு சீக்கிரம் கலக்கமடைகிறது. அத்தகையவர்கள் பூண்டு சாப்பிடக்கூடாது.