மழை காலத்தில் இந்த காய்கறிகளுக்கு கட்டாயம் 'நோ' சொல்லுங்க

Foods to avoid in rainy season: சில காய்கறிகளை நாம் மழைக்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் ஆபத்தான பூச்சிகள் இருப்பாதால் அவை ஆபத்துள்ளாக்கலாம், இது உங்கள் ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கும்.

 

மழைக்காலத்தில் சில காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கீரை வகை காய்கறிகளில் ஈரப்பதம் இருப்பதால், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் எளிதில் வளரும். மேலும், மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் இருப்பதால், அவை விரைவில் கெட்டுவிடலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, மழைக்காலத்தில் இந்த காய்கறிகளில் பூச்சிகள் இருக்கலாம். இவை உடலுக்கு பல பாதிபபுகளை ஏற்படுத்தலாம். மேலும், ஈரப்பதமான காலநிலை அவற்றின் மேற்பரப்பில் பூஞ்சையை உருவாக்கலாம்.

1 /8

பருவமழை காலத்தில் கத்திரிக்காயில் பூச்சிகள் அதிகம் தாக்கும். அதிகப்படியான ஈரப்பதத்தால் இந்த காய் விரைவாக அழுகிவிடலாம். இதை உட்கொள்வதால் உணவு விஷம், வாந்தி, அரிப்பு, ஒவ்வாமை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.  

2 /8

நிபுணர்களின் கூற்றுப்படி, ஈரப்பதமான மழைக்காலத்தில் வெண்டைக்காய் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த பருவத்தில் இந்த காய்கறி சாப்பிட சுவையாக இருக்காது. அதிக ஈரப்பதம் காரணமாக, பூச்சிகள் வெண்டைக்காயில் நுழைகின்றன.  

3 /8

மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் தக்காளியில் பூஞ்சை விரைவில் உருவாகி அழுக ஆரம்பிக்கும். இவற்றில் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயமும் அதிகம். அதன் நுகர்வு கபத்தை அதிகரிக்கலாம்.  

4 /8

பீன்ஸ் ஆரோக்கியமானது மற்றும் ஏராளமான நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது, மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக அவை விரைவாக கெட்டுவிடலாம். இந்த பருவத்தில் பீன்ஸில் பூஞ்சை தொற்று ஏற்படலாம்.  

5 /8

முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை மழைக்காலத்தில் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். அவை மிகவும் சத்தானதாக இருந்தாலும், இந்த காய்கறிகள் மழை காலத்தில் உட்கொள்வது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தலாம்.  

6 /8

கேரட், முள்ளங்கி மற்றும் டர்னிப்ஸ் போன்ற வேர் காய்கறிகள் மழைக்காலத்தில் சாப்பிட பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த பருவத்தில் மண்ணில் அதிக ஈரப்பதம் இருப்பதால், இந்த காய்கறிகள் அதிக தண்ணீரை உறிஞ்சிவிடும், இதன் காரணமாக அவை விரைவாக கெட்டுவிடும்.  

7 /8

பலருக்கு காளான் சாப்பிட பிடிக்கும். ஆனால் மழைக்காலங்களில் அவற்றை குறைவாக சாப்பிடுவது நல்லது. மழைக்காலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, காளானில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் விரைவாக வளர ஆரம்பிக்கின்றன. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.