சனி வக்ர நிவர்த்தியால் உருவாகும் மகாபுருஷ ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு புகழ் சேரும்

Effects of Saturn Transit: மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கான பலன்களை அளிக்கும் சனி பகவான் கர்மாவின் கிரகமாக, நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். சனீஸ்வரன் தயவு தாட்சண்யம் பாராமல், மக்களுக்கு அவர்களது கர்மாவிற்கு ஏற்றவாறு பலன்களை அளிப்பதால், அவரை பார்த்து அச்சப்படும் மனிதர்களே அதிகம். எனினும், சனி எப்போதும் அனைவருக்கும் கஷ்டங்களை அளிப்பார் என்றும் இல்லை. சனி மனம் மகிழ்ந்தால், அதற்கான கிரக நிலைகளும், ஜாதக நிலைகளும் அமைந்தால், நமது செயல்களும் நல்ல செயல்களாக இருந்தால், சனி அள்ளிக்கொடுப்பார். நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத உயரங்களுக்கு நம்மை அழைத்துச்செல்வார். 

வேத ஜோதிடத்தின்படி, கர்ம பலன்களைத் தரும் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி தனது வக்ர நிலையிலிருந்து மாறி, தனது சொந்த ராசியான மகர ராசியில் நேரான இயக்கத்துக்கு திரும்பினார். சனி பகவானுக்கு பிடித்தமான ராசியான மகர ராசியில் சனியின் நேரடி சஞ்சாரம் நாடு மற்றும் மக்கள் அனைவருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி ஜனவரி 17, 2023 வரை இந்த பாதையில் பயணிப்பார். இதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். இந்த நேரத்தில் அவர் ஷஷ் மஹாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்குவார். 

1 /4

சனியின் சஞ்சாரம் காரணமாக உருவாகும் இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இந்த ராசிக்காரர்கள் தொழில், பணம், உறவுகள், உடல்நலம் போன்ற விஷயங்களில் பெரிதும் பயனடைவார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

2 /4

ரிஷப ராசிக்காரர்களுக்கு வக்ர நிவர்த்தி அடைந்துள்ள சனி பகவான் சுப பலன்களைத் தருவார். அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இந்த நேரத்தில் அனைவரின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கத் தொடங்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

3 /4

சனி பகவானின் நேரடி சஞ்சாரம் தொழிலில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும். வேலை-வியாபாரத்தில் இதுவரை காத்திருந்த முன்னேற்றம் இப்போது கிடைக்கும். இந்த காலத்தில் அதிக பணம் ஈட்டுவீர்கள். 

4 /4

மகர ராசியிலேயே சனிபகவான் இடம் பெயர்ந்துள்ளார். ஆகையால், மகர ராசிக்காரர்கள் சனியின் நேரடி சஞ்சாரத்தால் அதிக பலன்களைப் பெறக்கூடும். தொழில்-வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். மரியாதை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.