நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு: இவற்றிலிருந்து விலகி இருங்கள்

சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இப்படி செய்து தங்கள் சர்க்கரை அளவை அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பலர் நல்ல ஆரோக்கியத்தைப் பெற உலர் பழங்களை உட்கொள்கிறார்கள். ஆனால் சில உலர் பழங்கள் மற்றும் உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

1 /5

பேரீச்சம்பழத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் அல்லது கஜூர் ஆகியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.  

2 /5

உலர் திராட்சை பழத்தில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உடலில் குளுக்கோஸின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் திராட்சையை உட்கொள்ளக்கூடாது.

3 /5

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் வெள்ளை ரொட்டியை தவிர்ப்பது நல்லது. பொதுவாக நீரிழிவு நோயாளிகள் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவை உண்ணக் கூடாது.  

4 /5

சர்க்கரை நோயாளிகள் பழங்களில் சப்போட்டா பழத்தை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இந்த பழம் மிகவும் இனிமையானது, அதன் கிளைசெமிக் குறியீடும் மிக அதிகமாக உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் சப்போட்டா பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.   

5 /5

நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கையும் மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். அதிக உருளைக்கிழங்கு சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது, மேலும் அதில் கிளைசெமிக் குறியீட்டின் அளவும் மிக அதிகமாக உள்ளது. உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)