G7 Summit: கார்பிஸ் விரிகுடாவில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உச்சி மாநாடு

அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமையன்று கடலோர ரிசார்ட்டில் நடைபெறும் மூன்று நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினார்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஜி 7 தலைவர்கள் ஒரு பில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசிகளை வழங்கத் தொடங்குவதாகவும், காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதாகவும் உறுதிமொழி அளித்தனர். 

Also Read | Mehul Choksi: டொமினிகா நீதிமன்றத்தில் மெகுல் சோக்ஸிக்கு ஜாமீன் மறுப்பு

1 /5

தென்மேற்கு இங்கிலாந்தில் பிகாச்சு போன்று உடையணிந்த நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் காலநிலை மாற்றம், வறுமை மற்றும் கோவிட் -19 ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். (Photograph:Reuters)

2 /5

உலகத் தலைவர்களின் இந்த சந்திப்பு, பிரச்சாரக் குழுக்களுக்கு ஜி 7 கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது. (Photograph:Reuters)

3 /5

உலகின் சில பணக்கார நாடுகளின் தலைவர்கள் கூடிய மாநாட்டில் கூடியுள்ள நிலையில், மேற்கத்திய அரசியல் உயரடுக்கிற்கு ஒரு செய்தியை அனுப்ப பிரச்சாரக் குழுக்கள் விரும்புகின்றன. (Photograph:Reuters)

4 /5

கார்ன்வாலில் கூடும் உண்மையான போரிஸ் ஜான்சன், ஜோ பிடென் மற்றும் பிற ஜி 7 தலைவர்கள் இந்த பிம்பங்களைப் போலவே இருக்க வேண்டும், நம்பிக்கையின் அலையில் சேர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று பிளிம்ப் போராட்டத்தை ஏற்பாடு செய்த கிராக் தி க்ரைசஸ் (Crack the Crises group) குழுமத்தைச் சேர்ந்த ஜேமி டிரம்மண்ட் கூறினார். (Photograph:Reuters)

5 /5

"அதாவது, பதுக்கலை நிறுத்தி, பகிர்வைத் தொடங்க வேண்டும் - உலகிற்கு தடுப்பூசி போடுவதற்கான பணம், அளவுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்வது; வரலாற்று பசுமை மீட்பு ஒப்பந்தத்தை வழங்குதல்" போன்ற முக்கியமான விஷயங்கள் பற்றி பிரசாரகர்கள் வலியுறுத்தினர் (Photograph:Reuters)