Astro: வெற்றிகளை தரும் வியாழக்கிழமை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!

Daily Horoscope: நிகழும் சோபகிருது வருடம், பங்குனி மாதம் 15ம் நாள், மார்ச் மாதம் 28ம் தேதி, தேய்பிறை கிருஷ்ண பக்ஷ த்ருதியை திதி, ஸ்வாதி நட்சத்திரம் கூடிய தினம், யாருக்கெல்லாம் சிறப்பான நாளாக அமையும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரப்படி நாளை உருவாகும் சுப யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் செழுமையும் பெற்று, அமோகமாக இருப்பார்கள்

1 /7

மார்ச் மாதம் 27ம் தேதி, பங்குனி மாதம் 15ம் நாள், வியாழக்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்ளலாம். ஹர்ஷன யோகம், லக்ஷ்மி யோகம், ஸ்வாதி நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்துள்ள நிலையில், 5 ராசிகள் இதனால் பலனடைவார்கள்

2 /7

அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். முதலீடு தொடர்பான விஷயங்களில் சந்தை நிலவரங்களை அறிந்து முடிவெடுக்கவும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு மேம்படும்.

3 /7

சிம்ம ராசி: தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும்.   

4 /7

கன்னி ராசி: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நிதியில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும் என்றாலும் செலவுகளை சமாளிப்பதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியும் இணக்கமும் நிலவும். 

5 /7

விருச்சிக ராசி: திறமைக்கேற்ப புதிய வேலைவாய்ப்பு சாதகமாகும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். உடல் நலன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய அனுபவம் ஏற்படும். 

6 /7

மகர ராசி: வேலையில், வியாபாரத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் சூழல் உண்டாகும். நன்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.