IPL 2021: IPL தொடரில் அதிகமாக ஆட்ட நாயகன் பட்டம் வென்றவர் யார்?

இந்தியன் பிரீமியர் லீக் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்குகிறது, முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் இடையே நடைபெறும். போட்டிக்கு முன்னர் ஐ.பி.எல் இன் சில சுவாரஸ்யமான விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

புது டெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் சென்னையில் தொடங்கும். முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இடையே நடைபெறும். இந்த போட்டி ஐபிஎல்லின் 14 வது சீசனில் தொடங்கும், இதில் அனைத்து அணிகளின் புகழ்பெற்ற வீரர்கள் ரசிகர்களை தங்கள் அற்புதமான ஆட்டத்தால் மகிழ்விப்பார்கள். அந்த வகையில் ஐ.பி.எல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

1 /5

ஐபிஎல்லில் அதிக ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆவார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரைச் சேர்ந்த இந்த புகழ்பெற்ற வீரர் இதுவரை 23 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

2 /5

கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் ஐபிஎல் இல் ஆட்ட நாயகன் விருதை 22 முறை வென்றுள்ளார்.

3 /5

இந்தியாவின் ரோஹித் சர்மா 18 ஆட்ட நாயகன் பட்டதை வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா அதிகபட்ச ஆட்ட நாயகன் பட்டதை வெற்றுள்ளார்.

4 /5

இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக ஆட்ட நாயகனை வென்றதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி ஆகியோர் நான்காவது இடத்தில் உள்ளனர். புகழ்பெற்ற வீரர்கள் இருவரும் இந்த விருதை 17-17 முறை பெற்றுள்ளனர்.

5 /5

ஆட்ட நாயகன் விருதை ஷேன் வாட்சன், யூசுப் பதான் 16-16 முறையும், சுரேஷ் ரெய்னா 14 முறை வென்றுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் கேப்டன் விராட் கோலி 13 முறை ஆட்ட நாயகன் பட்டதை வென்றுள்ளார்.