திருமணமான பெண்களுக்கான ஜாக்பாட் திட்டம்: கணக்கில் வரும் ரூ. 5,000

Pradhan Mantri Matru Vandana Yojana: விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.  குறிப்பாக பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு அரசாங்கம் 6000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இதேபோல், திருமணமான பெண்களுக்காக இந்த திட்டம் அரசால் நடத்தப்படுகிறது. நாட்டின் பெண்களுக்காக மத்திய அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றான PMMVY திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /5

கர்ப்பிணிப் பெண்களுக்காக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசு தொடங்கியுள்ளது. இதில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு 5000 ரூபாயை முழுமையாக வழங்குகிறது. இந்த அரசு திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் நிதியுதவி வழங்கப்படுகிறது. 

2 /5

இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், எந்த வித நோய் தாக்காமல் இருக்கவும் பெண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

3 /5

கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைந்தபட்சம் 19 வயது இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் நீங்கள் ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அரசாங்கம் 5000 ரூபாயை 3 தவணைகளில் கொடுக்கும். இந்த திட்டம் ஜனவரி 1, 2017 அன்று தொடங்கப்பட்டது.  

4 /5

பயனாளி பெண் மூன்று தவணைகளில் திட்டத்தின் தொகையைப் பெறுகிறார். முதல் தவணையாக 1000 ரூபாயும், இரண்டாம் தவணையாக 2000 ரூபாயும், மூன்றாம் தவணையாக 2000 ரூபாயும் வழங்கப்படும். இந்தப் பணம் நேரடியாக கர்ப்பிணிப் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  

5 /5

விவரங்களை அறிந்துகொள்ள https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இங்கே பெறுவீர்கள்.