ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!

Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது. பொதுவாக எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்

ஆனால், நமக்கு என்ன நடக்க இருக்கிறதோ அதற்கான வித்தை நாம் சென்ற பிறவியிலேயே நமது செயல்களால் விதைத்துவிட்டோம் என்பது ஜோதிடத்தின் அடிப்படை. ஒருவரின் ஜாதகத்தில் குரு கேது சேர்க்கை இருந்தால் என்ன பொருள்? அறிந்து தெளிவோம்...

1 /10

ஒருவரின் ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்திருந்தால், அவர்கள் சென்ற ஜென்மத்தில் வைத்து வந்த கடமைகள் பாக்கி இருக்கின்றன என்பது தான் பொருள். அதிலும் குறிப்பாக ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் செய்ய வேண்டிய கடமைகள் நிலுவையில் இருக்கின்றன என்பதே அதன் அர்த்தம்

2 /10

ஆழ்ந்த விருப்பமே இல்லாமல் சிலர் கோவிலுக்கு நன்கொடை கொடுப்பது, திருப்பணிக் குழுவில் யாராவது ஒருவரை சேர்த்து விடுவது என ஆன்மீகம் தொடர்பான பணிகளில், சொந்த முயற்சி இல்லாமலே ஒருவர் பங்கெடுப்பது என்பது ஆன்மீகத்தில் ஒருவர் செய்ய வேண்டிய கடமைகள் பாக்கியாக இருக்கிறது என்பதை குரு கேது சேர்க்கை கோடிட்டு காட்டும்

3 /10

கோவில் கும்பாபிஷேகம், திருப்பணிகளுக்கு, நன்கொடை கொடுப்பது அல்லது நன்கொடைகளை வசூலிக்கும் பொறுப்பு வந்து சேர்வது ஆகியவை முன்ஜென்மத்தில் இறைவனுக்கு செய்யத் தவறிய கடன் என்பதை குரு கேது சேர்க்கை உணர்த்தும். ஜாதகத்தை பார்க்கும் ஜோஷியர்கள், கோவிலுக்கு நன்கொடை கொடுங்கள் என்று பரிகாரமாக சொல்வார்கள். 

4 /10

குழந்தைகளுக்கான கடமைகளையும் செயல்பாடுகளையும் சரிவர நிறைவேற்றாதவர்களின் ஜாதகத்திலும் குருவும் கேதுவும் இணைந்திருப்பார்கள். இந்த ஜென்மத்தில் குழந்தைகள் பெற்றோரை மதிக்காமல் இருப்பது, பெற்றோர்கள் உயிரையே கொடுத்தாலும், பாசத்தைக் கொட்டினாலும், அதற்கான அங்கீகாரமும் மரியாதையும் பாசமும் குழந்தைகளிடம் இருந்து கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை உருவாக்குவதும் குரு கேது இணைப்பு தான். 

5 /10

குருவும் கேதுவும் இணைந்திருந்தால், குடும்பத்திற்காக எவ்வளவு தான் சம்பாதித்தாலும் கொடுத்தாலும் அதில் திருப்தியடையாதவர்களாக இருக்கும் குடும்பம் அமையும். வருமானத்தை சேமிப்பதிலும் பிரச்சனைகள் வரும்.

6 /10

குரு கேது இணைந்திருந்தால், பணத் தேவையும்,பணப் பிரச்சினையும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சம்பாதித்த பணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்காது, பிறருக்காகவே உழைப்பவர்களாக இருப்பார்கள்  

7 /10

குரு கேது சேர்க்கை இருப்பவர்களை கேது பகவான் வலுக்கட்டாயமாக ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு செய்ய வைப்பார். காதல் தோல்வி அல்லது திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வைத்து, ஆன்மீகத்தில் மூழ்க செய்வது குருவுடன் சேர்ந்த கேதுவின் வேலையாக இருக்கும்

8 /10

உழைக்கும் ஆற்றலையும், சிந்திக்கும் புத்தியையும், சிந்தனைத் தெளிவையும் குருவு, கேதுவும் இணைந்த ஜாதகர்கள் பெற்றிருப்பார்கள்

9 /10

கேது குரு சேர்க்கை இருப்பவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இறுதியில் நன்றாக சம்பாதித்து சேர்த்து  உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள்  அதிர்ஷ்டங்களும் யோகங்களும் இவர்களுக்கு கிடைக்கும், ஆனால் அதற்கு முன்னதாக மனப்பக்குவம் வந்துவிடும். விருப்பப்பட்டவை வந்து சேர்வதற்கு முன்னரே ஆழ்மனதில் இவற்றின் மீதான பற்று அற்றுவிடும்

10 /10

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது