In Pics: இஸ்லாமிய நாடான துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!

துபாயின் ஜெபல் அலியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் 2020 பிப்ரவரியில் நாட்டப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி இன்று கோயில் திறக்கப்பட்டது. இந்த பகுதியில் வழிபாட்டுத்தலம் வேண்டும் என்ற இந்தியர்களின் பல தசாப்த கால கனவை இது நிறைவேற்றியுள்ளது.

1 /5

துபாயில் உள்ள ஜெபல் அலியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவில் விஜய தசமி முதல் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

2 /5

கோவிலின் அடிக்கல் 2020 பிப்ரவரியில் நாட்டப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி இன்று கோயில் திறக்கப்பட்டது. இந்த பகுதியில் வழிபாட்டுத்தலம் வேண்டும் என்ற இந்தியர்களின் பல தசாப்த கால கனவை இது நிறைவேற்றியுள்ளது.  

3 /5

தசரா பண்டிகை நாளான அக்டோபர் 5-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக கோயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். அனைத்து மதத்தினரும் இங்கு நுழைய அனுமதிக்கப்படுவார்கள். 

4 /5

ஒன்பது உயரமான வெள்ளை பளிங்கு சிகரங்கள், சுவர்களில் சமஸ்கிருத வசனங்கள் பொறிக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தூண்கள் உட்பட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. கோவிலின் கதவுகள் வால்நட் மரத்தால் செய்யப்பட்டவை. இந்த கோவில் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது.

5 /5

டஜன் கணக்கான யானைகள் மற்றும் உயரமான கான்கிரீட் தூண்கள், ஒரு பரந்த எண்கோண தேவாலயம், ஒரு தனித்துவமான மேடை ஆகியவை கோயிலின் சிறப்பைக் கூட்டுகின்றன. திருமணங்கள், ஹோமம் மற்றும் பிற தனிப்பட்ட நிகழ்வுகளும் இங்கு அனுமதிக்கப்படும்.