புதினாவின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கோடையில், மக்கள் பெரும்பாலும் அடிக்கடி உஷ்ணம், வறண்ட சருமம் மற்றும் உணவு செரிக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை அதிகமாக சந்திக்கின்றனர். கோடையில் அஜீரண பிரச்சனையும் தொடங்குகிறது. இதன் காரணமாக மக்களுக்கு பசியின்மை ஏற்பட்டு, அவர்கள் உணவைத் தவிர்க்கிறார்கள். இது மட்டுமின்றி, கடும் வெயிலில் வெளியே செல்லும் போது, ​​வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எளிதாகவும் விரைவாகவும் சரி செய்ய புதினா உதவுகிறது. புதினா இலைகளில் பல வித சத்துக்கள் உள்ளன. இவை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன. 

1 /5

பெரும்பாலும் வெளியே இருக்கும்போது, நாம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட தயங்குவதுண்டு. ஏனெனில் வெங்காயம் சாப்பிட்டால் உடனே வாயில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், புதினா இலைகள் இந்த துர்நாற்றத்தை அகற்றும். புதினா இலைகள் மிகவும் வலுவான நறுமணத்தைக் கொண்டுள்ளன. இவை உங்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு துர்நாற்றத்தையும் நீக்குகிறது. வாய் துர்நாற்றம் அகல சில புதினா இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது புதினா இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து அந்த நீரை கொப்பளிக்கலாம். 

2 /5

கோடை காலத்தில் சருமம் மிகவும் தளர்வாகவும் சோர்வாகவும் இருக்கும். இது பெரும்பாலும் கோடை வெப்பநிலை காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட நேரத்தில், முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதற்கு புதினா இலைகளை அரைத்து முகம் முழுவதும் நன்றாக தடவினால், சருமம் நன்றாக இருப்பதோடு, முகமும் குளிர்ச்சி பெறும்.

3 /5

கோடையில், வலுவான சூரிய ஒளியால் ஏற்படும் வெயில் காரணமாக மக்கள் அடிக்கடி ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக பலர் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். 

4 /5

கோடையில் உணவு சீக்கிரம் ஜீரணமாகாது. இதனால் மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரும். அத்தகைய சூழ்நிலையில், இந்த அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க, புதினா உதவும். ஏனெனில் புதினா இலைகள் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். சில புதினா இலைகளை அரைத்து, வெங்காய சாறு மற்றும் 1 எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த பானத்தை குடித்தால், அது உங்கள் உணவை விரைவாக ஜீரணிக்க உதவும்.

5 /5

கோடையில் வாயு அல்லது வெளி உணவு காரணமாக அடிக்கடி வாந்தி பிரச்சனை தொடங்குகிறது. வாந்தி நிற்க புதினா இலையின் சாறு குடித்து வந்தால் உடனே வாந்தி நிற்கும். புதினா, வாந்தி சங்கடத்தை நீக்க மிக நல்ல நிவாரணமாக இருக்கும்.