முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானியின் காதல் கதை

இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகாஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் சுவாரஸ்யமான காதல் கதை.

இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகாஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் சுவாரஸ்யமான காதல் கதை.

 

1 /5

நீட்டாவை முதன்முதலாக திருபாய் அம்பானி பார்த்திருக்கிறார். அவர் தன் மூத்த மகனை சந்திக்குமாறு நீட்டாவிடம் கேட்க, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகே இருவரும் சந்தித்துள்ளனர்

2 /5

அம்பானியை பற்றி எல்லோரும் தெரிந்திருந்தபோதும், முகேஷ் அம்பானியை பற்றி நீட்டாவுக்கு அதுவரை எதுவும் தெரியாதாம். ஆனால், முகேஷ் அம்பானிக்கு நீட்டாவைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது.

3 /5

இருவரும் சந்தித்த பின்னர், முகேஷ் அம்பானியின் சொகுசு வாழ்க்கையை சோதனைக்குட்படுத்தியுள்ளார் நீட்டா. அதற்காக அவரை மும்பை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றிருக்கிறார். சாலையோர கடைகளில் உணவருந்த வைத்திருக்கிறார்.

4 /5

அதன்பிறகு தொடர்ச்சியான சந்திப்புகள் இருவருக்கும் பிணைப்பை அதிகரித்துள்ளது. ஒருநாள் காரில் செல்லும்போது திருமணம் செய்து கொள்ளலாமா என முகேஷ் அம்பானி கேட்க, மறுவார்த்தை பேசாமல் சம்மதம் தெரிவித்துள்ளார் நீட்டா

5 /5

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டாராம். கல்யாணத்துக்குப் பிறகு திருபாய் அம்பானி பள்ளியை தான் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு அம்பானி சம்மதம் தெரிவிக்க இருவரும் 1985 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.