பிள்ளைகள் தேர்வில் நல்ல மார்க் எடுக்க இதையெல்லாம் கவனத்தில் வையுங்கள்!

தற்போது 12ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் 10ஆம் வகுப்பிற்கும் தேர்வுகள் தொடங்கும் என்ற நிலையில், பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உட்கார்ந்து படிக்கும் இடத்தையும், எந்த திசையை நோக்கி உட்காந்து கல்வி பயில்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். உங்களின் முயற்சியில் இதுவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 

  • Mar 17, 2023, 23:58 PM IST

 

 

 

 

 

 

1 /5

வீடு பெரியதாக இருந்தால் படிக்கும் அறையை தனியாக வைத்து சரியான திசையில் அமர்ந்து படிக்கலாம். ஆனால் வீடு சிறியதாக இருந்தால் தனியாக படிக்கும் அறையை ஒதுக்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், படிக்கும் குழந்தைகள், எங்கு அமர்ந்து படிப்பது, அமைதியான சூழலுடன் படிப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றில்தான் முதல் பிரச்னை வருகிறது. வீட்டில் உள்ளவர்கள் படிக்கும் போது அமைதியாக இருந்தாலும், பொது இடத்தில் எந்த திசையை நோக்கிப் படித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற கேள்வி எழும்.  

2 /5

நீங்கள் ஒரு பொதுவான இடத்தில் மேஜை நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளலாம் அல்லது தரையில் பாயை விரித்து படிக்கலாம் அல்லது சிம்மாசனத்தில் கூட அமர்ந்து படிக்கலாம், ஆனால் எப்போதும் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பதை மனதில் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் படித்த பாடத்தை விரைவாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். 

3 /5

மாணவர்கள் எந்த அறையின் மூலையிலும் அமர்ந்து படிக்கக் கூடாது. மூலையில் அமர்ந்து படிப்பதால் மாணவர்களின் திறமை மேம்படுவதில்லை. படிக்கும் போது உங்கள் காதுகள் முடியால் மூடப்படக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காதுகளை முடி மூடியிருந்தால் குழப்பம் ஏற்பட்டு மனதை ஒருமுகப்படுத்த முடியாது.

4 /5

மாணவர்களின் கவனம் அலைப்பாய்ந்தால், கல்வியின் தெய்வமான சரஸ்வதியின் படத்தை கிழக்கு திசையில் உள்ள படிக்கும் அறையில் வைத்து, தினமும் படிப்பை தொடங்கும் முன், அவரது படத்தைப் பார்த்து வணங்க வேண்டும். 

5 /5

உங்கள் படிப்பு மேசையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அறையின் வாயிலிலும் வேப்ப மரக்கிளையை வைத்துக் கொள்ளலாம், இதனால் வீட்டிற்கு சுத்தமான காற்று கிடைக்கும். அதே நேரத்தில், நேர்மறை ஆற்றல் ஓட்டமும் இருக்கும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், படிப்பில் கடினமாக உழைத்தால், தேர்வில் நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)