வீட்டில் தரித்திரத்தை கொண்டு வரும் ‘இந்த’ செடிகள் இருந்தால் உடனே அகற்றவும்..!!

வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன.  துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்ம்றை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும்  தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

1 /5

கருவேல மரத்தை வீட்டின் அருகில் அல்லது அருகில் நடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தில் இது அசுபமாக கருதப்படுகிறது. இந்த மரம் இருந்தால், வீட்டில் சந்தோஷம் இருக்காது என்பதோடு தரித்திரமும் ஏற்படலாம்.  

2 /5

வீட்டில் பருத்தி அல்லது பட்டு பருத்தி செடிகளை நடக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி,  வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தையும் வறுமையையும் கொண்டு வருகிறது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

3 /5

மருதாணி செடியில், தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த செடி வீட்டிற்கு அருகில்  இருந்தால், வீட்டில் அமைதியும் சந்தோஷமும் இருக்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

4 /5

புளியஞ்செடியை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது. வீட்டைச் சுற்றி புளிச் செடியை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தில் நல்லதாக கருதப்படுவதில்லை. இது உங்கள் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.

5 /5

வாஸ்து சாஸ்திரத்தின் படி காய்ந்த செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது. வீட்டில் நடப்பட்ட செடி  காய்ந்தால், அதை உடனடியாக அகற்ற வேண்டும், ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலை கடத்துகின்றன. அதனால் வாழ்க்கையில் துன்பங்களும் பிரச்சனைகளும் வந்து கொண்டே இருக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)