கர்ப்பிணிப் பெண்னை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த காமுகர்கள்

ஹரியானாவில் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!  

Last Updated : May 27, 2018, 07:23 PM IST
கர்ப்பிணிப் பெண்னை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த காமுகர்கள் title=

இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது, இதில் இருந்து தங்களை காத்து கொள்ள பெண்கள் பல முன்னேற்பாட்டு முயற்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது. 

இந்நிலையில், ஹரியானா மாநிலம் மனேஷர் பகுதியை சேர்ந்த 6 மாதம் நிறைந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த மே 21ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தனது கணவருடன் சென்ற போது மர்ம நபர்கள் சிலரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 

அவர், மருத்துவ பரிசோதனைக்காக செல்லும் வழியில் தன்னுடைய கணவரின் இருசக்கர வாகனத்தில் இருந்து சிரமம் காரணமாக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது, செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும்  அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது, தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கைக் குழந்தையின் எதிரிலேயே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை, தொடர்ந்து மீண்டும் இது போன்ற சம்பவம் நிகந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News