விளையாட்டின் மூலம் நல்லுறவு: பிரதமர் மோடி புகழாரம்!!

விளையாட்டின் மூலம் இந்தியா-நேபாளத்துக்கு இடையே நல்லுறவை மேம்படுத்த முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!

Last Updated : May 13, 2018, 09:02 AM IST
விளையாட்டின் மூலம் நல்லுறவு: பிரதமர் மோடி புகழாரம்!! title=

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு 3-வது முறையாக நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாளத்தின் பிரதமராக பதவியேற்ற கே.பி. ஷர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேபாளம் வந்தார், முதல் நாள் பயணமாக மோடி, ஜானக்பூர் மற்றும் அயோத்தி இடையேயான பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்து பேசினார்.

தொடர்ந்து அவர், நேபாள பிரதமர் சர்மா ஒலியுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள்(2015-ல் நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட தினம்) தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. 

அதை தொடர்ந்து, இரண்டாம் நாள் பயணமாக நேற்று அவர் காட்மாண்டு அருகே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பசுபதி நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் கூறும்போது...!

இரு நாடுகளுக்கு இடையே அதிக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் மூலம் உறவை மேம்படுத்த முடியும். குறிப்பாக நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது வீரர் சந்தீப் லமிசேன் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்பாடுகளால் இந்தியா-நேபாளத்துக்கு இடையே நல்லுறவு மேலும் பலப்படும் என்றார். 

Trending News