மூன்று தேசிய விருதுகள் வென்ற பாகுபலி-2!

65-வது தேசிய திரைப்பட விருதுகளை இன்று தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்துள்ளார்!

Last Updated : Apr 13, 2018, 03:10 PM IST
மூன்று தேசிய விருதுகள் வென்ற பாகுபலி-2! title=

65-வது தேசிய திரைப்பட விருதுகளை இன்று தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்துள்ளார்!

65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை 

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’  திரைப்படம் பெற்றுள்ளது. காற்று வெளியிடை மற்றும் ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்கு இசையமைத்தற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி-2 படம் 3 பிரிவுகளில் (சிறந்த சண்டைப்பயிற்சி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு) தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட வருதுகள் வரும் மே 3-ஆம் நாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News