எல்லை தாண்டிய நட்பு வீடியோ வைரல்: புலிகளுடன் நட்பு பாராட்டும் செல்ல நாய்க்குட்டி

Weird Friendship: நாயை தாயாக நினைக்கும் புலிக்குட்டிகள்; புலிகளுக்கு பால் கொடுத்த நாய்த் தாய் என விலங்குகளின் வித்தியாசமான பாசமழையில் நனையும் இணைய இதயங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 15, 2022, 03:18 PM IST
  • விலங்குகளின் அதிசயமான பாசம்
  • புலிக்குட்டிக்கு பால் கொடுத்த நாய்த் தாய்
  • நாயை தாயாக நினைக்கும் புலிக்குட்டிகள்
எல்லை தாண்டிய நட்பு வீடியோ வைரல்: புலிகளுடன் நட்பு பாராட்டும் செல்ல நாய்க்குட்டி title=

Viral Video: கோல்டன் ரெட்ரீவர் ரக நாய் ஒன்று புலிகளுடன் சாதாரணமாக சுற்றித்திரியும் வீடியோ வைரலாகிறது, இணையத்தை அதிர வைக்கும் நட்பு அனைவரையும் நெகிழச் செய்கிறது.

புலிகள் மத்தியில் அச்சமின்றி சுற்றித்திரியும் நாயின் நட்பும் துணிச்சலும் வைரலாகிராது.  விலங்குகளின் வீடியோக்களை விரும்பாதவர்கள் யார்? நாய்க்குட்டிகள் விளையாடுவது, பூனைக்குட்டிகளின் குறும்பு, யானைகளின் பாசம் என அழகான வீடியோக்கள் அன்பை பரிமாறுகின்றன.

அவற்றில் சில இதயத்தை உருக்கி சிரிக்க வைக்கின்றன. இதுபோன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது சாதாரணமான விஷயம் என்றாலும், பாயும் புலிகளுக்கு இடையில் நாய்க்குட்டி சுற்றித் திரிவதும், அவை அனைத்தும் மிகவும் இயல்பாக நடப்பதும் ஆச்சரியம் அளிக்கிறது.

உண்மையில் இந்த அசாத்தியமான விஷயத்தை சாதாரணமானதாக மாற்றியது நாயின் பாசம் தான் என்ற செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது, நாய், தாயாக இருந்தபோது, இந்த புலிகளின் குழந்தைப் பருவதில் தாய்ப்பால் ஊட்டியதாகவும், அதனால் புலிகள் நாயை, தாயாக நினைப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பாம்புன்னா என்ன: வாயிலிருந்து இரையை பறிக்கும் கழுதைப்புலி

இந்த வீடியோ டைகர் பிக்ஃபான் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தால் பகிரப்பட்டு, 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 52,000 விருப்பங்களையும் பெற்றுள்ளது. "ஒரு நாய் தாய்க்கு, பல புலி குழந்தைகளை வளர்ப்பது எளிதானது அல்ல" என்று அந்த வீடியோவில் தலைப்பிடப்பட்டுள்ளது.

வீடியோவை இங்கே பாருங்கள்:

52,000க்கும் அதிகமான லைக்குகள் மற்றும் பல கருத்துகளுடன் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவைப் பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர் மற்றும் விலங்குகளின் அழகான பிணைப்பை விரும்புவதாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

நாயின் அன்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது, அது இனங்களுக்கு அப்பாற்பட்டது என்று நாய்ப் பிரியர்கள் நெகிழ்ச்சியாக பதிவிட்டுல்ளனர்.

ஒரு பயனர் எழுதினார், ”அந்த நாய் புலிகளை வளர்க்க உதவியது, தனது தாய்ப்பாலை ஊட்டியது. புலிக்குட்டிகளும் நாயை காயப்படுத்தவில்லை. இது சாத்தியம் ஆனால் நம்பமுடியவில்லை."

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

மற்றொருவர், "வெளிப்படையாக அந்தப் புலிகளும் அந்த நாயும் ஒன்றாக வளர்ந்தன" என்று மூன்றாமவர் எழுதினார், "நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லை, புலிகளை வளர்த்த நாயை, புலிக்குட்டிகள் காயப்படுத்தாது, உண்மையில் தங்கள் தாயாக இந்த நாயை அவை நினைக்கின்றன." என்று கூறுகிறார்.

நான்காவது ஒருவர், "நாய் காக்கும் அமைதி ஆச்சரியமானது அதை நான் விரும்புகிறேன்" என்றார்.

நியூஸ்ஃபேரின் கூற்றுப்படி, இந்த வீடியோ சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள யாண்டாய் நகரில் படமாக்கப்பட்டது என்று தெரிகிறது.

மேலும் படிக்க | தூங்குபவரின் மீது ஏறிய 2 மலைப்பாம்புகள் - அதிர்ச்சி வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News