ஓய்வு பெற்ற இந்திய ராணுவ நாய்க்கு கிடைத்த ராஜமரியாதை... பாராட்டும் நெட்டிசன்கள்..!!

இந்திய ராணுவத்தின் நாயின் ஓய்வுக்குப் பின் கிடைத்த மரியாதையை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். ராணுவ நாய் மேரு, மீரட்டில் உள்ள தனது முதியோர் இல்லத்தை அடைய ரயிலின் ஏசி முதல் பெட்டியில் பயணம் செய்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 22, 2024, 08:38 PM IST
ஓய்வு பெற்ற இந்திய ராணுவ நாய்க்கு கிடைத்த ராஜமரியாதை... பாராட்டும் நெட்டிசன்கள்..!! title=

சமுதாயத்திலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, நமது பங்களிப்பிற்கு கிடைக்கும் மரியாதை நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஓய்வு பெற்று செல்பவர்களுக்கு பிரியா விட அளிக்கும் பழக்கம், அனைத்து நிறுவனங்களிலும் கடைபிடிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு கிடைப்பதைப் போலவே விலங்குகளுக்கும் போன்ற மரியாதைகள் அவ்வபோது கொடுக்கப்படுகின்றன. சமீபத்தில், ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் நாய் ஒன்றும், வெர்மான்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் இருந்து கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பூனை ஆகியவை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

தற்போது இந்திய ராணுவத்தின் நாயின் ஓய்வுக்குப் பின் கிடைத்த மரியாதையை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். ராணுவ நாய் மேரு, மீரட்டில் உள்ள தனது முதியோர் இல்லத்தை அடைய ரயிலின் ஏசி முதல் பெட்டியில் பயணம் செய்துள்ளது.

 22வது ராணுவ நாய் பிரிவைச் சேர்ந்த ராணுவ நாயான மேரு, சமீபத்தில் தனது ஓய்வு கால பயணத்தின் மூலம் இணைய பயனர்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது. வைரலாகி வரும் வீடியோவில், ஓய்வு பெற்ற பிறகு, மேரு ரயிலின் முதல் ஏசி கோச்சில் மிகவும் வசதியான பாணியில் பயணிப்பதைக் காணலாம். 9 வயது மேரு ஒரு விசுவாசமான டிராக்கர் நாயாக அரும் பங்காற்றிய நிலையில், ஓய்வு பெற்றுள்ளார். மீரட்டில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அவர் சென்றதைக் காட்டும் வைரலான பதிவு பலரைக் கவர்ந்துள்ளது.

 

மேலும் படிக்க | கல்லறையில் இருந்து வந்த குரல்.... பூமியில் புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்..!!

மேரு தனது எஞ்சிய நேரத்தை நாய்கள் முதியோர் இல்லத்தில் கழிக்க உள்ளது. ரயிலின் முதல் ஏசி கோச்சில் மேருவின் பயணம் குறித்த வைரல் வீடியோ பதிவில், "மேரு, 22 ராணுவ நாய் பிரிவைச் சேர்ந்த ராணுவ டிராக்கர் நாய், ஓய்வு பெறும்போது மீரட்டுக்கு ரயிலில் ஏறியுள்ளது. அவர் தனது மீதமுள்ள நாட்களை நாய்கள் முதியோர் இல்லங்களில் கழிப்பார். பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் சர்வீஸ் நாய்களை ஏசி முதல் வகுப்பில் தங்கள் பயிற்சியாளர்களுடன் பயணிக்க அனுமதித்துள்ளது’ என பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News