கொரோனா நிதிக்காக 2 ஆண்டு ஊதியத்தை அளிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்...

இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக தனது இரண்டு ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிதி கணக்கில் நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Last Updated : Apr 2, 2020, 02:53 PM IST
கொரோனா நிதிக்காக 2 ஆண்டு ஊதியத்தை அளிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்... title=

இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக தனது இரண்டு ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிதி கணக்கில் நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள கம்பீர், இதுகுறித்து குறிப்பிடுகையில்., "மக்கள் தங்கள் நாடு அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். உங்கள் நாட்டுக்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதுதான் உண்மையான கேள்வி. நான் எனது நாட்டிற்காக எனது இரண்டு ஆண்டு ஊதியத்தை அளிக்கிறேன். நீங்களும் முன்வர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி திங்களன்று, அவரும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் பிரதமர் நிவாரண நிதியம் மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்கள் ஆதரவை உறுதியளிப்பதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தம்பதியினர் குறிப்பிடுகையில்., "அனுஷ்காவும் நானும் பிரதமர்-கேர்ஸ் நிதி மற்றும் முதலமைச்சரின் நிவாரண நிதியம் (மகாராஷ்டிரா) ஆகியவற்றிற்கு எங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளோம். பலரின் துன்பங்களைப் பார்த்து எங்கள் இதயங்கள் உடைந்து போகின்றன, எங்கள் பங்களிப்பு ஒருவிதத்தில், எங்கள் வலியைத் தணிக்க உதவும் என்று நம்புகிறோம். சக குடிமக்களாக நாங்கள்" என ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வரிசையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும் இணைந்துள்ளார்.

மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை 437 புதிய கொரோனா வழக்குகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 60- ஆக உயர்ந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 2100-ஆக உள்ளது, இதில் 1869 செயலில் உள்ள வழக்குகள், 171 மீட்கப்பட்ட வழக்குகள் மற்றும் 60 இறப்புகள் அடக்கம்.

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு மதக் குழுவின் தலைமையகம் இப்போது நாட்டில் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) நோய்த்தொற்றுகளின் மிகப்பெரிய ஆதாரமாக உருவெடுத்துள்ளது. புதன்கிழமை, டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபையில் கலந்து கொண்ட கிட்டத்தட்ட 8,700 பேரை மாநில அரசுகள் அடையாளம் கண்டுள்ளன, மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலரையும் கண்டுபிடிப்பதற்காக ஏராளமான காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பணியாளர்களை அரசு முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News