இந்திய மகளிர் (U-17) கால்பந்து அணி அதிர்ச்சி தோல்வி!

தென்னாப்பிரிக்காவின் ஜொனஸ்பார்க்கில் நடைப்பெற்று வரும் BRICS U-17 கால்பந்து போட்டியில் இந்தியா மகளிர் அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

Last Updated : Jul 19, 2018, 11:05 AM IST
இந்திய மகளிர் (U-17) கால்பந்து அணி அதிர்ச்சி தோல்வி! title=

தென்னாப்பிரிக்காவின் ஜொனஸ்பார்க்கில் நடைப்பெற்று வரும் BRICS U-17 கால்பந்து போட்டியில் இந்தியா மகளிர் அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஆட்டத்தின் 25-ஆம் நிமிடத்தில் தென்னாப்பிரிக்கா வீராங்கனைக்கு இந்திய கோல்கீப்பர் அர்ச்சணா ஆறுமுகம் வழிவிட தென்னாப்பிரிக்க தனது மதல் கோலினை பதிவு செய்தது. இதனையடுத்து அடுத்த 15 நிமிடத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு பதிலடி கொடுக்க இந்தியாவின் வன்லால்ஹிரிதாரி முதல் கோலினை பதிவு செய்தார்.

ஆட்டத்தின் முதல் பாதி வரையில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்துவந்த நிலையில், இரண்டாம் பாதியில் தொன்னாப்பிரிக்கா அணி அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

இதனையடுத்து இரண்டாம் பாதியில் வெறும் 20 நிமிடங்களில் தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து 4 கோல்களினை அடித்தது. இதனால் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 1-5 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது போட்டில் இன்று ரஷ்யாவை எதிர்கொள்கிறது.

Trending News