PBKS vs DC: 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி; பஞ்சாப் பிளே ஆஃப் கனவு காலி

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs DC போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், பஞ்சாப் அணிக்கான பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2023, 11:52 PM IST
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி
  • பஞ்சாப் அணி போராடி தோல்வி
  • பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு?
PBKS vs DC: 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி; பஞ்சாப் பிளே ஆஃப் கனவு காலி title=

டெல்லி அதிரடி பேட்டிங்

ஐபிஎல் 2023 தொடரின் 64வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில்  விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன்படி, டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய டேவிட் வார்னர், பிருத்வி ஷா இணைந்து அதிரடியாக விளையாடிய நிலையில், பிருத்வி ஷா அரைசதம் கடந்தார். அதன்பின் ரோசோவும் சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்க விட்டு 80 ரன்களை கடக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது.

மேலும் படிக்க | IPL 2023: மிகவும் மோசமாக சொதப்பிய ஐபிஎல் 2023 பேட்டர்கள்

பஞ்சாப் அணி பதிலடி

இதனையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் ஜோடியில் தவான் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரையடுத்து, களமிறங்கிய தைடே காயம் காரணமாக 55 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின், லிவிங்ஸ்டன் களமிறங்கி அதிரடி காட்டி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருந்தும், பஞ்சாப் அணி வீரர்கள் டெல்லி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.

டெல்லி அணி வெற்றி

முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 94 ரன்களும், அதர்வ தைடே 55 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 22 குவித்துள்ளனர். டெல்லி அணியில் அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கான பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால், மிகச்சிறிய வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. 

மேலும் படிக்க | IPL: தோற்றது மும்பை... பட்டையை கிளப்பிய லக்னோ - தொடரிலிருந்து வெளியேறும் அணிகள் எவை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News