ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை: இந்திய வீராங்கனை முன்னேற்றம்!

Last Updated : Aug 11, 2016, 05:34 PM IST
ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை: இந்திய வீராங்கனை முன்னேற்றம்! title=

ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் வில்வித்தையில் முதல் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட இந்திய வீராங்கனை பாம்பய்லா தேவி, ஆஸ்திரியவை சேர்ந்த வீராங்கனை லாரன்ஸ் பல்டேப்பை எதிர்கொண்டார். மொத்தம் 5 சுற்றுகள் கொண்ட ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த பாம்பய்லா தேவி, அடுத்தடுத்த 3 சுற்றுகளை வென்று 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறினார்.  

அதேபோல இரண்டாவது சுற்றில், சீன தைபெயி வீராங்கனை லீ ஷி-சியாவுடன் மோதிய பாம்பய்லா தேவி, வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Trending News