புரோ கபடி லீக் 5வது சீசன் இன்று துவக்கம்

Last Updated : Jul 28, 2017, 10:51 AM IST
புரோ கபடி லீக் 5வது சீசன் இன்று துவக்கம் title=

ஐதராபாத்தில் புரோ கபடி லீக் 5வது சீசன் இன்று துவங்குகிறது. தொடரின் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன.

தொடக்க விழாவந்து ஐதராபாத் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் அக்ஷய் குமார், சிரஞ்சீவி, ராம்சரண், ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், தமிழ் தலைவாஸ் அணி உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர், என்.பிரஸாத், அல்லு அரவிந்த், மகளிர் கிரிகெட் அணி தலைவர் மித்தாலி ராஜ், பாட்மின்டன் வீரர்கள் சாய் ப்ரணீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், குரு சாய்தத், பயிற்சியாளர் கோபிசந்த், ராமுராவ் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகிய பல பிரபலங்கள் பங்கற்கவுள்ளனர்.

இதையடுத்து நடைபெறவுள்ள முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. புரோ கபடி லீக் தொடரானது இந்திய பிரீமியர் லீக் தொடர்களில் 2வது இடத்தில் உள்ளது. புரோ கபடி லீக் தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News