BCCI தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு

பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு என அறிவிப்பு

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 14, 2019, 04:06 PM IST
BCCI தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு title=

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐ தலைவருக்கான தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் (அக்டோபர் 14) நிறைவடைந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் சவுரவ் கங்குலி வேட்புமனுக்கள் தாக்கல் செய்தார். இன்று மூன்று மணியுடன் வேட்புமனுக்கள் தாக்கல் முடிந்ததை அடுத்து பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இன்று வேட்புமனு தாக்கல் முடிந்து பிசிசிஐ அமைப்பின் தலைவர் பதவி உட்பட பல பொறுப்புக்கு தேர்தல் நடந்து முடிய குறைந்தது ஒரு வாரகாலம் ஆகும். அக்டோபர் 23 ஆம் தேதி பி.சி.சி.ஐ பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஆனால் அதற்கு முன்பே சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

நாடு முழுவதும் மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகளின் கூட்டங்கள் டெல்லி மற்றும் மும்பையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தன. அந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலியின் பெயரும், அதேபோல ஐ.பி.எல் போட்டியின் தலைவராக பிரஜேஷ் படேல் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக சவுரவ் கங்குலி கூறியது, "உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிறுவனத்தை நடத்துவது தனக்கு சவாலாக இருக்கும். இது தவிர, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் நிதி நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த பதவிக்கு என்னை பரிந்துரை செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நேரத்தில் பி.சி.சி.ஐ.யின் நிர்வாகத்தை நன்றாக எடுத்து செல்ல வேண்டும். அதை சரிசெய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், பி.சி.சி.ஐ நிர்வாகத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஏனெனில் அது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிறுவனமாகும் என்று கங்குலி கூறியிருந்தார்.

Trending News