பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இலங்கை வீரர்கள் மறுப்பு

Last Updated : Oct 15, 2017, 12:34 PM IST
பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இலங்கை வீரர்கள் மறுப்பு title=

ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் மோத உள்ளது. 

இதன் கடைசி 20 ஓவர் போட்டி அக்டோபர் 29-ம் தேதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்தப் போட்டியில் விளையாட, இலங்கை அணியை அனுப்ப சம்மதிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

எனினும், கிரிக்கெட் வீரர்களின் இந்தக் கோரிக்கையால், போட்டியை லாகூரில் நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளது. நாளை இலங்கை கிரிக்கெட் வாரியம் இது குறித்த முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News