சுஷாந்துக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்: சுரேஷ் ரெய்னா வீடியோ டிவீட்....

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நினைவு கூரும் வீடியோவை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார். 

Last Updated : Aug 25, 2020, 04:02 PM IST
    1. சுரேஷ் ரெய்னா சுஷாந்த் சிங்குக்கு நீதி கேட்கிறார்
    2. நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் உயிருடன் இருப்பீர்கள் - சுரேஷ் ரெய்னா
    3. சுரேஷ் ரெய்னா ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சுஷாந்துக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்: சுரேஷ் ரெய்னா வீடியோ டிவீட்.... title=

புதுடெல்லி: மறைந்த பாலிவுட் நடிகர் ஒரு உண்மையான உத்வேகம் என்றும் அவர் எப்போதும் மக்கள் இதயத்தில் உயிருடன் இருப்பார் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காக (Sushant Singh Rajput) தெரிவித்துள்ளார். திங்களன்று, ரெய்னா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மறைந்த நடிகரை நினைவுகூரும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், மேலும் சுஷாந்துக்கு நீதி கிடைக்க அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதைத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

"சகோதரா! நீங்கள் என்றுமே எங்கள் மனங்களில் உயிர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் ரசிகர்கள் உங்கள் இழப்பை அதிகமாக உணர்கிறார்கள். உங்களுக்கு நீதி கிடைக்க நம் அரசும், தலைவர்களும் எல்லா முயற்சிகளையும் செய்வார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். நீங்கள் உண்மையான ஊக்கம் தருபவர்" என்று ரெய்னா பதிவிட்டுள்ளார். 

 

ALSO READ | இரட்டை விளையாட்டு விளையாடும் Rhea Chakraborty....Sushant தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்.....

 

 

 

ஜூன் 14 அன்று அவரது வீட்டில் இறந்து கிடந்த சுஷாந்தின் மரணம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தால் சிபிஐக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது 13 ஆண்டு வாழ்க்கையில் 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி 20 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரெய்னா விளையாடுவார்.

 

ALSO READ | தோனியை அடுத்து சின்ன தல-ஐ பாராட்டி கடிதம் எழுதிய பிரதமர் மோடி...

Trending News