Tokyo Olympics 2020: வாள்வீச்சு போட்டியில் 2வது சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி

Tokyo Olympics 2020: வாள்வீச்சு சாப்ரே பிரிவில் பவானி தேவி முதல் சுற்றூல் 15-3 என்ற கணக்கில் வெற்றி  பெற்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2021, 09:02 AM IST
Tokyo Olympics 2020: வாள்வீச்சு போட்டியில் 2வது சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி title=

Tokyo Olympics 2020: ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன்னர்.

கொரோனா அச்சம் காரணமாக, இந்தியா சார்பில் 20 பேர் மட்டுமே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் (Tokyo Olympics) பங்கேற்றார்கள். இதில், 8 அதிகாரிகளும் அடங்குவர். அதன்படி ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி (Bhavani Devi). இன்று அவருடைய சேபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. இதில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர்.

ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பிவி சிந்து பாட்மிண்டன் முதல் சுற்றில் வெற்றி

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார். இரண்டாவது சுற்றில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனோனுடன் மோதியதில், பவானி தேவி 7-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்

ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க வேட்டை துவங்கியது, வெள்ளி வென்றார் மீராபாய் சானு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News