இலங்கையில் தமிழக மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Last Updated : Jan 5, 2017, 10:38 AM IST
இலங்கையில் தமிழக மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிப்பு title=

சென்னை: நெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending News