தா.பாண்டியன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்!

உடல்நல குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

Last Updated : Jul 30, 2018, 12:36 PM IST
தா.பாண்டியன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்! title=

உடல்நல குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். திமுக தலைவரும் ஸ்டாலின் அவர்களின் தந்தையுமான கருணாநிதி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தா.பாண்டிய அவர்களை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இச்சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இன்னும் ஓரிரு நாட்களில் தா.பாண்டியன் அவர்கள் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்நிகழ்வின் போது அவருடன் துனை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் அவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News