அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்திற்கு இடியுடன் கூடிய மழை - வானிலை மையம்

Last Updated : Jul 3, 2017, 04:14 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்திற்கு இடியுடன் கூடிய மழை - வானிலை மையம் title=

தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக பல்வேறு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழையின் அளவு  நீலகிரி மாவட்டத்தில் 5 செ.மீ  மழை பெய்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் நகரில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அதிபட்சமாக 39 டிகிரி செல்சிசும், குறைந்த பட்சமாக 30 டிகிரி செல்சியசும் வெப்பம் நிலவும் என வானிலை ஆய்ல மையம் கூறியுள்ளது.

Trending News