சென்னை: பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட காவலர்!!

சென்னை கீழ்ப்பாக்கம் உள்ள ஐ.ஜி. அலுவலகத்தில் இன்று காலை போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Last Updated : Feb 3, 2019, 03:32 PM IST
சென்னை: பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட காவலர்!! title=

சென்னை கீழ்ப்பாக்கம் உள்ள ஐ.ஜி. அலுவலகத்தில் இன்று காலை போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், சிறப்பு காவல் படை மூன்றாம் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை வழக்கம்போல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை தலைமை அலுவலகத்தில் பணியில் இருந்தார்.

அப்போது திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இந்த சம்பவம் காலை சுமார் 5.30 மணியளவில் நடைபெற்றது. கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே காவலர் மணிகண்டன் உயிரிழந்தார். 

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்த போலீசார், காவலரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட மணிகண்டனுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, நேற்றிரவு தனது நண்பர்களுடன் அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News